தென்னாப்பிரிக்கா தொடரை வென்ற இந்தியா.. ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா

192 0

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது.

நான்கு டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டிலும் தென்னாப்ரிக்கா ஒரு போட்டியிலும் வெற்றி அடைந்திருந்தது. இந்நிலையில் 4 ஆவது டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இரண்டாவது மற்றும் 3 ஆவது டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த சஞ்சுசாம்சன் நேற்றைய போட்டியில் முதலில் நிதானமாக ஆடினார். அபிஷேக் சர்மா 36 ரன்களில் வெளியேறினார். பின்னர் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா, பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டு வாணவேடிக்கை நிகழ்த்தினார். இருவரும் போட்டிப்போட்டு கொண்டு தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை சிதறவிட்டனர்.

சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவரும் சதம் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 109 ரன்களும், திலக் வர்மா 47 பந்துகளில் 120 ரன்களும் விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது

284ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்ரிக்கா அணி இந்திய அணியினிப் பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 18.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.டி 20 தொடரில் தென்னாப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சஞ்சு சாம்சன்-திலக் வர்மா ஜோடி ஆட்டமிழக்காமல் பார்டனர்ஷிப்பில் 210 ரன்களை குவித்தது சாதனையாகும். 283ரன்களை இந்திய அணி குவித்தது , டி 20 போட்டிகளில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன்களை குவித்திருந்தது இந்திய அணிஓராண்டில் டி20போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார். இந்திய அணி நேற்றைய போட்டியில் 23 சிக்சர்களை பறக்கவிட்டதும் சாதனை பட்டியலில் 3 ஆம் இடத்தை பெற்றுத்தந்துள்ளது . இந்திய அணி 14.1 ஓவரிலேயே 200 ரன்களை குவித்ததும் சாதனையாக உள்ளது. உலகக்கோப்பை டி20 வெற்றிக்கு பிறகு இந்தியா விளையாடிய 5 டி20 தொடர்களையும் வென்று சாதனை படைத்துள்ளது.

Related Post

புஷ்பா 2 பட விவகாரம், தாய் அன்றே இறந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்

Posted by - December 18, 2024 0
புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது புஷ்பா. முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் செம மாஸாக தயாராகி கடந்த…

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2025 0
தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு…

மனைவி இறந்ததால் விரக்தியில் வாழ்ந்த 62 வயது தந்தைக்கு திருமணம் செய்துவைத்த மகள்

Posted by - October 24, 2023 0
திருவனந்தபுரம்: திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கக்கூடிய ஒன்று. தான் கரம் பிடிக்கும் வாழ்க்கை துணையுடன் இறுதிவரை ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.…

பெரும் விபத்து தவிர்ப்பு: கொல்லம்-சென்னை ரெயிலில் அடிச்சட்டத்தில் விரிசலுக்கு காரணம் என்ன? அதிகாரிகள் ஆய்வு

Posted by - June 5, 2023 0
செங்கோட்டை: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி…. முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்….

Posted by - August 12, 2024 0
இந்திய பங்குச்சந்தைகள் தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. ஹிண்டன்பர்க், அதானி விவகாரத்தினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அதானி குழும நிறுவனங்களின் செபி தலைவர் முதலீடு இருப்பதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *