கங்குவா படத்தில் அதிக இரைச்சல் ஏன்? – வைரலாகும் ரசூல் பூக்குட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு!

181 0

கங்குவா படத்தில் அதீத ஒலி இருப்பதாக ரசிகர்களும் பொதுமக்களும் விமர்சித்துவரும் வேளையில், ஆஸ்கர் வென்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கருணாஸ், பாபி தியோல், யோகி பாபு, திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் கங்குவா. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேற்று (14ம் தேதி) உலகெங்கிலும் 10,000 திரையரங்குகளில் 8 மொழிகளில் வெளியானது. மேலும், கங்குவா படம் முன்பதிவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி மிரளவைத்தது.

இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானதும் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். இதில், பாசிட்டிவ் கருத்துகளும், நெகட்டிவ் கருத்துகளும் இருந்தன. ஆனால், பெரும்பான்மையான ரசிகர்களும், மக்களும், படம் முழுக்க அதிக சத்தம் இருக்கிறது. இதனால், ஒருவகையான எரிச்சலும், தலைவலியும் வருகிறது என விமர்சித்திருந்தனர்.இது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி கங்குவா படத்தில் இருக்கும் அதீத ஒலி குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரீ-ரிகார்டிங் செய்யும் என் நண்பர் ஒருவர் இந்த காணொளியை எனக்கு அனுப்பினார். நமது பிரபலமான திரைப்படத்தில் ஒலி குறித்து இப்படியான விமர்சனத்தை பார்க்கும்போது மனமுடைகிறது. எங்களின் கலையும், கலைத்திறனும் இரைச்சல் யுத்தத்தில் சிக்கிக்கொண்டுள்ளன. இதற்கு யாரை குற்றம் சொல்வது?

ஒலிப்பதிவாளரையா அல்லது பாதுகாப்பின்மையுடன் இறுதி நேரத்தில் எண்ணற்ற திருத்தங்களுடன் வருவதையா. தலைவலியுடன் ரசிகர்கள் வெளியே சென்றால், மீண்டும் அந்தப் படத்திற்கு வரமாட்டார்கள் என்பதை நமது நண்பர்கள் தீர்க்கமாக சொல்ல வேண்டிய நேரமிது” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

துல்கர் சல்மானுக்கு என்னாச்சு.. சோகத்தில் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு நீக்கியது ஏன்

Posted by - July 4, 2023 0
துல்கர் சல்மான் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான அவர் தற்போது முன்னணி…

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ

Posted by - June 10, 2025 0
இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தக் லைப் படம் அதிகம் விமர்சனங்க தற்போது சந்தித்து வருகிறது. கடும் ட்ரோல்கள் காரணமாக வசூலும்…

2 கோடி கொடுத்ததும் அந்த மாதிரி நடிக்க மறுத்த சாய் பல்லவி!! என்ன காரணம் தெரியுமா?

Posted by - May 10, 2024 0
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. பெரும்பாலும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.…

இந்த நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம்.. ஏ.ஆர்.ரகுமான் கான்சர்ட்டால் ரசிகர்கள் அதிருப்தி

Posted by - September 11, 2023 0
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.…

ஒரே கதையை 2 படமாக எடுத்து ரசிகர்களை குழப்பிய இயக்குனர்கள்.. என்ன கொடுமை பாஸ் இதெல்லாம்

Posted by - January 1, 2025 0
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த கதையை பின்பற்றி பல படங்கள் வருவதுண்டு. சில இயக்குனர்கள் வெற்றி பெற்ற படத்தின் நடிகர்களை வைத்து அதே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *