தென்னாப்பிரிக்கா தொடரை வென்ற இந்தியா.. ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா

173 0

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது.

நான்கு டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டிலும் தென்னாப்ரிக்கா ஒரு போட்டியிலும் வெற்றி அடைந்திருந்தது. இந்நிலையில் 4 ஆவது டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இரண்டாவது மற்றும் 3 ஆவது டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த சஞ்சுசாம்சன் நேற்றைய போட்டியில் முதலில் நிதானமாக ஆடினார். அபிஷேக் சர்மா 36 ரன்களில் வெளியேறினார். பின்னர் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா, பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டு வாணவேடிக்கை நிகழ்த்தினார். இருவரும் போட்டிப்போட்டு கொண்டு தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை சிதறவிட்டனர்.

சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவரும் சதம் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 109 ரன்களும், திலக் வர்மா 47 பந்துகளில் 120 ரன்களும் விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது

284ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்ரிக்கா அணி இந்திய அணியினிப் பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 18.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.டி 20 தொடரில் தென்னாப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சஞ்சு சாம்சன்-திலக் வர்மா ஜோடி ஆட்டமிழக்காமல் பார்டனர்ஷிப்பில் 210 ரன்களை குவித்தது சாதனையாகும். 283ரன்களை இந்திய அணி குவித்தது , டி 20 போட்டிகளில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன்களை குவித்திருந்தது இந்திய அணிஓராண்டில் டி20போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார். இந்திய அணி நேற்றைய போட்டியில் 23 சிக்சர்களை பறக்கவிட்டதும் சாதனை பட்டியலில் 3 ஆம் இடத்தை பெற்றுத்தந்துள்ளது . இந்திய அணி 14.1 ஓவரிலேயே 200 ரன்களை குவித்ததும் சாதனையாக உள்ளது. உலகக்கோப்பை டி20 வெற்றிக்கு பிறகு இந்தியா விளையாடிய 5 டி20 தொடர்களையும் வென்று சாதனை படைத்துள்ளது.

Related Post

கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீடு தேடி வரும் ‘சாக்லேட்’ பரிசு

Posted by - September 21, 2023 0
மும்பை: கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று ‘சாக்லேட்’ அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி…

ஆந்திராவில் திசைமாறிய திருடர்கள்- கடை, தோட்டத்தில் 450 கிலோ தக்காளி கொள்ளை

Posted by - August 4, 2023 0
திருப்பதி: தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.…

காதலியை கொன்று உடலை தொட்டியில் மறைத்த வாலிபர் – செல்போன் அழைப்புகள் மூலம் சிக்கினார்

Posted by - June 10, 2023 0
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மகேவா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண் ராஜ்கேசர் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

வடமாநிலங்களில் நிலநடுக்கம்: பதற்றத்தில் தவித்த மக்கள்

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி : புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில…

காதலியின் கணவரை கொன்று 6 துண்டாக வெட்டி புதைத்த கள்ளக்காதலன் கைது

Posted by - July 19, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *