தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

215 0

மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்கள் விலை வரும் நாட்கள் உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க, மத்திய அரசு ஆண்டு தோறும் தடை விதிக்கிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு துவங்கி, ஜூன் 14-ம் தேதி வரை, மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும்.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கரைந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் மீன்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்பதால் அசைவப் பிரியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காசிமேடு, வானகரம், திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை, காவாங்கரை,பெரம்பூர்,வில்லிவாக்கம்,பெரம்பூர்,வில்லிவாக்கம், நொச்சிக்குப்பம்,பட்டினப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய மீன் மார்கெட்டில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

 

மீன்பிடி தடை காலங்களில் மீன்களின் விலை கடுமையாக உயரும். ஆனால் இந்த முறை தடைக்காலம் தொடங்கியுள்ளபோதும் மீன்கள் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யபட்டது. இது குறித்து பேசிய மீனவர்கள் தற்போது போதுமான அளவு மீன்கள் கையிருப்பு உள்ளதால் மீன்கள் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் வரும் காலங்களில் மீன்கள் இருப்பு குறைந்தால் மீன்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறினர்.

Related Post

குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொள்ளாமல் கட்டுப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள்..!

Posted by - June 18, 2025 0
நீங்கள் எப்பேர்ப்பட்ட நல்ல சூழலில் உங்கள் குழந்தையை வளர்த்தாலும் சரி, கெட்ட அல்லது மோசமான வார்த்தைகளை அவர்கள் கற்று கொள்வதை உங்களால் முற்றிலும் தடுக்க முடியாது என்பதே…

தவெக – பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்

Posted by - April 21, 2025 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக, இந்த முறை தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும்…

நடிகை கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு சென்ற முன்னணி தமிழ் ஹீரோ! யார் பாருங்க

Posted by - December 3, 2024 0
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியான நடிகை. தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக ஹிந்தியிலும் நுழைந்து இருக்கிறார். பாலிவுட்டில் நுழைந்தது…

கண்பார்வையை அதிகரிக்க கேரட் மட்டுமில்லை இந்த எளிய பொருட்களையும் சாப்பிடலாமாம்… ட்ரை பண்ணுங்க…!

Posted by - October 17, 2023 0
நம் உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று கண்கள். நம் கண்களால் தான் நாம் இந்த உலகை ரசிக்க முடிகிறது. ஆனால், மோசமான வாழ்க்கை முறையால் கண்…

நீட்- ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..!

Posted by - March 15, 2023 0
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார். 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *