நான் ஜெயலலிதாவை கொன்றேனா?

83 0

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது என கூறியுள்ளார்.

ஜெயலலிதா இறந்த அன்று என்னை முதலமைச்சராக பதிவியேற்க சொல்லி அப்போதைய அதிமுக அமைச்சர்கள் வலியுறுத்தியதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தலைகீழ் மாற்றம்

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் உடல்நிலை குறைவு காரணமாக அதே ஆண்டு டிசம்பரில் அவர் உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக செயல்பட்டு வந்தார். இதற்கிடையில் சசிகலாவை முதலமைச்சராக்கும் பணிகள் நடக்க, அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை தண்டனை அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்த செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார். சசிகலா தண்டனைக் காலம் முடிந்து வருவதற்குள் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். பிரிந்து கிடந்த ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்து நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியை நடத்தினர். பின்னர் 2022ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

சசிகலாவின் புதிய கட்சி

இந்த நிலையில் 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது என தெரிவித்துள்ளார். அதாவது, “2016ம் ஆண்டு தேர்தல் முடிந்து ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். நான் அவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்கு நல்ல நாள் பார்த்து வைத்திருந்தேன்.

ஆனால் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மாரடைப்பு வந்து விட்டது. அதனால் தான் அவர் உயிரிழந்து விட்டார். அதேசமயம் வெளியில் எதிரிகளெல்லாம் நான் தான் ஜெயலலிதாவை கொன்று விட்டேன் என கதை கட்டி விட்டார்கள். இதெல்லாம் யாராவது நம்புவாங்களா?. நீங்கள் அரசியலுக்காக சொன்னால் அது எப்படி உண்மையாகும்?. எல்லாவற்றையும் நாம் பார்த்தோம்.

ஜெயலலிதா இறந்த பிறகு அன்று இரவே அவர் சிகிச்சைப் பெற்று வந்த தனியார் மருத்துவமனையில் அப்போதைய அதிமுக அமைச்சர்கள் அனைவரும் வந்து என்னைப் பார்க்கிறார். சின்னம்மா நீங்கள் முதலமைச்சராகி விடுங்கள் என சொன்னார்கள். எல்லா எம்.எல்.ஏ.,க்களும் அப்படியே வந்து சொன்னார்கள்.

நான் அதற்கு, ஒரு அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை. என் சொந்த அக்காவாக மட்டுமே அவரை நினைத்தேன். அதனால் அக்கா இறந்திருக்காங்க. இப்போது என்னால் முதலமைச்சராக பதவியேற்க முடியாது. அவருக்கு செய்ய வேண்டிய காரியத்தை ஜெயலலிதா முறைப்படி வீட்டில் செய்ய வேண்டி இருக்கிறது.  எனவே ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கட்டும். அமைச்சர்கள் அப்படியே இருக்கட்டும். நடுவில் செங்கோட்டையனை அமைச்சரவையில் நீக்கப்பட்ட நிலையில் அவரை சேர்க்க வேண்டும் என சொன்னேன். இருப்பவர்கள் முதலில் பதவியேற்க சொல்ல, அன்று இரவே அனைவரும் பதவியேற்றனர்.

Related Post

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

Posted by - April 9, 2026 0
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அதிமுக வேட்பாளர் கோகுல…

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - March 20, 2026 0
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள…

விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? – எடப்பாடி பேச்சு

Posted by - July 22, 2025 0
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய விஜயின் தவெக மற்றும் சீமான் ஆகியோருக்கு, எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். தொண்டர்களை குஷிப்படுத்த ஆட்சியில் பங்கு என, பாஜகவினர் பேசி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *