பச்சை பட்டாணி.. வெண்டைக்காயைவிட பெஸ்ட்.. பச்சை பட்டாணியை சாப்பிடறீங்களா? அடேங்கப்பா.. இவ்ளோ இருக்கா?

210 0

சென்னை:

பச்சை பட்டாணியில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? பச்சை பட்டாணியை நிறைய சாப்பிடறீங்களா? அங்கே தான் பிரச்சனையே.. என்னன்னு பாருங்க.

பொதுவாக, பச்சை காய்கறிகளும், பழங்களும் நன்மைகளை தரக்கூடியவையே.. அந்தவகையில், பச்சை பட்டாணியும் தவிர்க்க முடியாதது.. காரணம், பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்துக்கள் நிறைய உள்ளன.. இந்த சத்துக்கள்தான், உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுப்பதுடன், உடல் எடையையும் அதிகமாகாமல் தடுத்து விடுகிறது..

சத்துக்கள்:

இந்த பட்டாணியில் வைட்டமின் A, B, C, E, K போன் சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்துமே, மனித நலனுக்கு பயன்படுபவை.. சர்க்கரை நோயாளிகளும் இதை ஓரளவு சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இந்த பட்டாணியின் கிளைசமிக் இன்டெக்ஸ் அளவு இதில் குறைவாகவே உள்ளது.பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!!

இதிலுள்ள இரும்பு சத்தும், தாமிர சத்தும், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குகின்றன.. இதிலுள்ள பொட்டாசியம் சத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.. இதனால் இதய ஆரோக்கியம் பேணப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.. எனவே, குறைந்த அளவு கலோரி கொண்ட பட்டாணிகள் உடல் எடை குறைப்பதற்கு தூண்டுகோலாக விளங்குகின்றன.

குழந்தைகள்:
உடல் எடையை குறைப்பதில் இந்த பட்டாணிக்கு பங்கு இருப்பதை போலவே, ஒல்லியாக இருப்பவர்கள் சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படவும் காரணமாக இருக்கிறதாம்..

அந்தவகையில், பலவீனம் குறைந்தவர்கள், உடல்பலம் பெற பட்டாணியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு இந்த பட்டாணியை உணவில் சேர்த்து தரலாம்.. வைட்டமின் K நிறைந்த பட்டாணியை சாப்பிடும்போது, குழந்தைகளின் புத்திக்கூர்மையும் அதிகமாகிறது.. வெண்டைக்காயைவிட 3 மடங்கு பாஸ்பரஸ், இந்த பட்டாணியில் உள்ளதால், மூளைளை திறன்பட செயல்பட வைக்கிறது. நினைவுத்திறனும் அதிகரிக்க செய்கிறது.

சரும வறட்சி:
சரும பாதுகாப்புக்கு கவசமாக திகழ்கிறது இந்த பட்டாணிகள்.. உணவில் அடிக்கடி பட்டாணி சாப்பிட்டு வந்தால், சருமம் பொலிவு பெறும்.. சரும வறட்சி அண்டாது.. கொலாஜின் உற்பத்தி அதிகமாகும்.. எலும்புகளின் உறுதிக்கும், செயல்பாட்டுக்கு ஆதாரமாக விளங்கும் கால்சியம், இந்த பச்சை பட்டாணியில் அதிகமதாகவே உள்ளது.. இதனால், எலும்பு சம்பந்தமான நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்கிறது.

ஆண்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிற இந்த பட்டாணிகள்.. குறிப்பாக, வயிற்று புற்று நோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்புகள் இந்த பட்டாணிக்கு உண்டு.

நஞ்சு பட்டாணி:

ஆனால், அளவுக்கு மிஞ்சினால், பச்சை பட்டாணியும் நஞ்சுதான்.. ஏனென்றால், இந்த பட்டாணியில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. இது பெண்களுக்கு அவ்வளாக நல்லதில்லை.. உடலின் மூட்டுகளில் வலியையும், வீக்கத்தையும் உண்டுபண்ணிவிடும்.. எலும்புகளில் அமிலப்படிகங்களையும் உருவாக்கிவிடும்.

அதேபோல, நிறைய பட்டாணி சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.. வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.. அதேபோல, புரோட்டீன் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தின் செயல்பாடும் பாதிக்கும் என்கிறார்கள்.. இது சில சமயம், சிறுநீரக கற்களையும் ஏற்படுத்திவிடும்.

தவிர்க்க கூடாது:
பச்சை பட்டாணியிலுள்ள பைடிக் அமிலம், உடலிலுள்ள இரும்பு, கால்சியம், துத்தநாகம் போன்ற சத்துக்களையும் உறிஞ்சுகிறதாம். அதற்காக பச்சை பட்டாணியை முற்றிலும் தவிர்த்து விடக்கூடாது.. குறிப்பிட்டு அளவு மருத்துவரின் ஆலோசனையை பெற்று சாப்பிட்டு வரலாம்.

Related Post

மாஃபியா அராஜகம்..! தப்பை தட்டிக் கேட்டால் கொலையா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அரசு வேடிக்கை?

Posted by - February 15, 2025 0
மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் மாணவன் உட்பட இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தை தட்டிக் கேட்டால் கொலை செய்யும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

சுழன்று அடித்த மாண்டஸ் புயல்.. வேரோடு சாய்ந்த 48 மரங்கள்

Posted by - December 10, 2022 0
Mandous cyclone : நேற்று மாலை 7 மணியிலிருந்து நள்ளிரவு 1 மணி வரை 48 மரங்கள் கீழே விழுந்துள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.மாண்டோஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை…

திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் – உடல் தானம்

Posted by - March 25, 2025 0
நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்க்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கு முன்னதாகவே ஷிஹான் ஹுசைனி, தனது உடலை தானம் செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஹுசைனி…

விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் – பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்ட பிரேமலதா

Posted by - May 10, 2024 0
விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார். மறைந்த தேமுதி நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *