war news

பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் பதிலடி – குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?

115 0

ஆஃப்கானிஸ்தான் மீது போரை தொடங்குவதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரை அறிவித்த பாகிஸ்தான்:

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் தாலிபன்கள் ஆட்சி நடைபெறும் ஆஃப்கானிஸ்தான் மீது நேரடியான போரை இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தான் படைகள் எல்லையில் தாக்குதல் நடத்தின. அடுத்த சில மணி நேரத்திலேயே, ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் காந்தஹாரில் பாகிஸ்தான் குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பதற்றம் வெடித்தது. இதையடுத்து, ஆஃப்கானிஸ்தான் மீது வெளிப்படையான போரை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

 

”பொறுமை முடிவுற்றது”

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்களது பொறுமை அதன் முடிவை எட்டிவிட்டது. தற்போது இது எங்களுக்கு இடையேயான வெளிப்படையான போர்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக எல்லையில் தீவிரமடைந்த மோதலுக்கு மத்தியிலும் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆஃப்கானிஸ்தான் சொல்வது என்ன?

காபூலில் குறைந்தபட்சம் மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும், பாதிப்புகள் தொடர்பான தகவல் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.’ உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததா? என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.  தெற்கே உள்ள காந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பாக்டியாவிலும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாலிபான் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய கொடிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வியாழக்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் தங்களது ராணுவம் தாக்குதலைத் தொடங்கியதாகவும், எதிரி நாட்டின் 55 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தரைவழித் தாக்குதலில் தனது எட்டு வீரர்களும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சிலர் காயமடைந்தாலும், பாகிஸ்தானின் பல ராணுவ மையங்கள் கைப்பற்றப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சொல்வது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஃப்கானிஸ்தானில் டந்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் என்பவை,  அப்பகுதியில் பதுங்கியிருந்த ஆயுதக் குழுவினரை அழிப்பதற்கானது என பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வியாழக்கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் தாக்குதல் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் நடத்தப்பட்டது என்றும், ராணுவ நிலைகள் ஆஃப்கானிஸ்தானால்  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உண்மை இல்லை எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் நடந்த மோதலுக்குப்  பின்னர் இருநாடுகளின்  எல்லைகளும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

பஹல்காம் தாக்குதல்! இன்னும் ஏன் வாயை திறக்கல! பாக்.. பிரதமரை கிழித்த பாக் வீரர்கள்

Posted by - April 24, 2025 0
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷேபாஸ் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் ஜம்மு…

உங்கட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கா? அப்போ இந்த 11 கீபோர்ட் ஷார்ட்கட் தெரிஞ்சுக்கோங்க.. வேற லெவல் அனுபவம்..

Posted by - October 28, 2024 0
உங்களிடம் லேப்டாப் (Laptop), கம்ப்யூட்டர் (Computer) என்ற ஏதேனும் ஒரு சாதனம் இருந்தால் கூட, கட்டாயம் இந்த முக்கியமான 11 கீபோர்ட் ஷார்ட்கட் கீஸ் (Important 11…

சீனா, பாக்., மட்டும் தான் பிரச்னையா? 7 நாடுகளுடன் எல்லைகளை பகிரும் இந்தியா – உறவு எப்படி?

Posted by - May 15, 2025 0
எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளுடன், இந்தியாவின் உறவு எப்படி உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். இந்தியாவும்.. அண்டை நாடுகளும்.. அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!

Posted by - June 8, 2023 0
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று…

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் – பயனர்கள் தவிப்பு.!

Posted by - March 6, 2024 0
பேஸ்புக்கை விட ரீல்ஸ்கள் நிறைந்த இன்ஸ்டா முடங்கியது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்தது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *