பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் பதிலடி – குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?

96 0

ஆஃப்கானிஸ்தான் மீது போரை தொடங்குவதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரை அறிவித்த பாகிஸ்தான்:

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் தாலிபன்கள் ஆட்சி நடைபெறும் ஆஃப்கானிஸ்தான் மீது நேரடியான போரை இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தான் படைகள் எல்லையில் தாக்குதல் நடத்தின. அடுத்த சில மணி நேரத்திலேயே, ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் காந்தஹாரில் பாகிஸ்தான் குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பதற்றம் வெடித்தது. இதையடுத்து, ஆஃப்கானிஸ்தான் மீது வெளிப்படையான போரை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

 

”பொறுமை முடிவுற்றது”

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்களது பொறுமை அதன் முடிவை எட்டிவிட்டது. தற்போது இது எங்களுக்கு இடையேயான வெளிப்படையான போர்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக எல்லையில் தீவிரமடைந்த மோதலுக்கு மத்தியிலும் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆஃப்கானிஸ்தான் சொல்வது என்ன?

காபூலில் குறைந்தபட்சம் மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும், பாதிப்புகள் தொடர்பான தகவல் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.’ உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததா? என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.  தெற்கே உள்ள காந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பாக்டியாவிலும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாலிபான் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய கொடிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வியாழக்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் தங்களது ராணுவம் தாக்குதலைத் தொடங்கியதாகவும், எதிரி நாட்டின் 55 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தரைவழித் தாக்குதலில் தனது எட்டு வீரர்களும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சிலர் காயமடைந்தாலும், பாகிஸ்தானின் பல ராணுவ மையங்கள் கைப்பற்றப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சொல்வது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஃப்கானிஸ்தானில் டந்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் என்பவை,  அப்பகுதியில் பதுங்கியிருந்த ஆயுதக் குழுவினரை அழிப்பதற்கானது என பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வியாழக்கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் தாக்குதல் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் நடத்தப்பட்டது என்றும், ராணுவ நிலைகள் ஆஃப்கானிஸ்தானால்  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உண்மை இல்லை எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் நடந்த மோதலுக்குப்  பின்னர் இருநாடுகளின்  எல்லைகளும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

பஹல்காம் தாக்குதல்! இன்னும் ஏன் வாயை திறக்கல! பாக்.. பிரதமரை கிழித்த பாக் வீரர்கள்

Posted by - April 24, 2025 0
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷேபாஸ் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் ஜம்மு…

ரியாத்தில் யுஎஸ் தூதரகத்தை தாக்கிய ட்ரோன் – வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்

Posted by - March 3, 2026 0
ரியாத்தில் தாக்குதல்: சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த…

ரூ.137 கோடியே 46 லட்சத்துக்கு வாங்கிய வீட்டில் வசிக்க முடியவில்லை என புலம்பும் கோடீஸ்வரர்

Posted by - April 12, 2023 0
லண்டன்: இங்கிலாந்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் டாம் கிளான் பீல்ட். இவர் கடந்த மாதம் நார்த் ஹேவன்பாயின்ட் பகுதியில் ஒரு பழமையான வீட்டை வாங்கினார். இதற்காக இந்திய…

மோடி என்னை விட வல்லவர்… புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்… ஆனா ஒரு ஆப்பும் வச்சுட்டார்.!!

Posted by - February 14, 2025 0
இந்திய பிரதமர் மோடி தன்னை விட வல்லவர் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ஆனாலும் ஒரு செக்கும் வைத்துள்ளார். அது என்னவென்று பார்க்கலாம். அமெரிக்காவிற்கு…

திருட வந்த இடத்தில் நாயுடன் கொஞ்சி விளையாடிய வாலிபர்

Posted by - August 9, 2023 0
வீடுகளில் நாய் வளர்ப்பதற்கு முக்கிய காரணம் திருடர்களிடம் இருந்து வீட்டை காக்கும் என்பது தான். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அதற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *