திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்

111 0

அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், 2017ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்தது. இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மோதல்கள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ்.  இதனையடுத்து பல சட்ட போராட்டங்கள் நடத்தினாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து எந்த வித நிபந்தனையும் முறை அதிமுகவில் இணைய எவ்வளவோ முயற்சி செய்தார்.

திமுகவில் ஓபிஎஸ்

ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், பாஜகவின் உதவியோடு அதிமுகவில் இணைய திட்டம் போட்டார். ஆனால் பாஜகவின் வலியுறுத்தலையும் இபிஎஸ் கேட்டுக்கொள்ளவில்லை. இதனையடுத்து திமுகவில் இணைய திட்டமிட்டார். இதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்  இன்று அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர் செல்வத்தை திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சேகர்பாபு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

இதனையடுத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வத்தை ஆரத்தழுவி வரவேற்றார். இதனையடுத்து ஸ்டாலின்  முன்னிலையில் திமுகவில் ஓ.பன்னீர் செல்வம் இணைந்தார். அப்போது உசிலம்ப்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், முன்னாள் எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

Related Post

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

Posted by - July 18, 2025 0
பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியே கற்பனையானது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்,…

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

Posted by - April 20, 2026 0
தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய…

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

Posted by - April 3, 2026 0
சட்டமன்ற  தேர்தலில், தமிழகம் முழுவதும் உள்ள என்டிஏ வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதே தனது பணி என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார். கேரள கண்ணூரில் செய்தியாளர்களிடம்…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - January 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *