மோடி என்னை விட வல்லவர்… புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்… ஆனா ஒரு ஆப்பும் வச்சுட்டார்.!!

178 0

இந்திய பிரதமர் மோடி தன்னை விட வல்லவர் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ஆனாலும் ஒரு செக்கும் வைத்துள்ளார். அது என்னவென்று பார்க்கலாம்.

அமெரிக்காவிற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ட்ரம்ப், மோடி தன்னை விட வல்லவர் என்றும் புகழாரம் சூட்டினார். எதைப்பற்றி அவர் இப்படி கூறினார் என்று பார்க்கலாம்.

“பேச்சுவார்த்தை நடத்துவதில் மோடி என்னை விட வல்லவர்”

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மோடியும் ட்ரம்ப்பும் சந்தித்து பேசினர். இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ட்ரம்ப், பேச்சுவார்த்தை நடத்துவதில் மோடி தன்னைவிட வல்லவர் என்றும், தான் அவருக்கு ஒரு போட்டி கூட இல்லை என்றும் புகழாரம் சூட்டினார். அதோடு, மோடி மற்றும் இந்தியாவுடன் தான் தனித்துவமான பந்தத்தை கொண்டுள்ளதாவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

வரி விதிப்பிலிருந்து இந்தியா தப்பாது – ட்ரம்ப்

இந்தியாவுடன் சிறந்த பந்தம் இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள தங்களது வர்த்தக பங்காளிகளுக்கு தான் விதித்துவரும் வரியிலிருந்து இந்தியா தப்ப முடியாது என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். ஏற்கனவே, இந்தியாவின் இறக்குமதி வரிகள் அதிகமாகவும், நியாயமற்றதாகவும் இருப்பதாக தெரிவித்திருந்த ட்ரம்ப், இந்தியா ஒரு கட்டண ராஜா என்றும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், இந்தியா எந்த அளவிற்கு வரி விதிக்கிறதோ, அதே அளவிற்கு தாங்களும் வரி விதிப்போம் என கூறினார்.

”சிறந்த வர்த்தக பாதையை உருவாக்குவோம்”

உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய வர்த்தகப் பாதைகளில் ஒன்றை உருவாக்க இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார். அந்த வர்த்தகப் பாதை, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில்(IMEC) இயங்கும் என்று கூறினார். இதற்காக, இந்தியாவிலிருந்து இஸ்ரேல் முதல் இத்தாலி வரையிலும், அங்கிருந்து அமெரிக்கா வரை அனைத்து பங்காளி நாடுகளையும் இணைக்கும் விதமாக, சாலைகள், ரயில்வே வழித்தடங்கள், கடலுக்கடியில் கேபிள்களை என அனைத்திற்கு ஏராளமான பொருட்செலவை எல்லா நாடுகளும் செய்ய உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், இந்த வழித்தடத்தில், இந்தியாவை வளைகுடா பகுதியுடன் இணைக்கும் கிழக்கு காரிடாரும், வளைகுடா பகுதியை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்கு காரிடாரும் அடங்கும் எனவும், இதற்காக ஏற்படுத்தப்பட உள்ள சாலை, ரயில்வே, கப்பல் போக்குவரத்துகளுக்கான வழித்தடங்களை ஏற்படுத்த, இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய யூனியன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மணி ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம், இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது கையெழுத்தானதாகவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்தியாவிற்கான ராணுவ தளவாட விற்பனை அதிகரிக்கப்படும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்தார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளத்தையும் பாதுகாக்க இருவரும் உறுதியேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

”அமெரிக்கா-இந்தியா உறவு வலுவானது”

இந்த அறிவிப்புகளின் மூலம், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நட்புறவு, இதுவரை இருந்ததிலேயே மிகவும் வலுவானது என்பதை தான் சுட்டிக்காட்ட விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், இதுவரை எந்த இரு நாடுகளின் இரு தலைவர்களிடையே இருந்த நட்புறவிலேயே, மோடியுடனான தனது நட்பே சிறந்தது என்றும் ட்ரம்ப் பெருமிதமாக கூறினார்.

Related Post

விண்வெளியில் கீரை, தக்காளி விளைவித்த சீன வீரர்கள்

Posted by - October 24, 2023 0
பீஜிங்: அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி…

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

Posted by - August 8, 2025 0
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்யாவுடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல லட்சம் கோடி ரூபாய்…

“லூனா 25” விழுந்து நிலவில் 10 மீட்டர் பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

Posted by - September 2, 2023 0
நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25…

இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு – நடந்தது என்ன.?

Posted by - May 22, 2025 0
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க இன்று 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவில் நடைபெற்ற கூட்டத்தின்…

பொருளாதார தடைகளுக்கு பயந்த நாடல்ல இந்தியா!

Posted by - September 8, 2025 0
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வர்த்தக வரி விதித்துள்ளதன் மூலம், அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *