“புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்தவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

151 0

கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த அதிமுக நிர்வாகி காட்டிக் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி,  கொலையாளிகளை விட்டு விட்டு மற்றவர்களை கைது செய்து வழக்கை திசை திருப்புவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். ஜகபர் அலியின் மனைவி மற்றும் பிள்ளைகள் காரைக்குடியில் வசித்து வரும் நிலையில, இவர் மட்டும் திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் அருகே தனியாக வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் தொழுகை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது எதிரே வந்த மினி லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜகபர் அலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

ஜகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஜகபர் அலியின் மனைவி மரியம், திருமயம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமயம் அருகே கல் குவாரி என்ற பெயரில் சிலர், கனிம வளத்தை சுரண்டி கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதை தடுக்கும் வகையில், தனது கணவர் ஜகபர் அலி தொடர்ந்து போராடி வந்ததாக தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கல் குவாரி உரிமையாளர்கள், லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு, விபத்து போன்று ஜோடித்து விடுவதாக ஜகபர் அலிக்கு மிரட்டல் விடுத்ததாக, அவரின் மனைவி கூறியுள்ளார். அதை பொருட்படுத்தாமல் கனிம வள கொள்ளைக்கு எதிராக ஜகபர் அலி தொடர்ந்து போராடி வந்ததாக தனது புகாரில் மரியம் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான போலீசார் விசாரணையில் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ஜெபகர் அலி இறப்புக்கு நீதி வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related Post

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

புதுச்சேரி

Posted by - April 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்” ஸ்டாலின் மடல்…

Posted by - February 25, 2025 0
தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியும், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.…

திக் திக் டிட்வா…சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் – வெதர்மேன் அலர்ட்

Posted by - November 29, 2025 0
டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கிய நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கன மழைக்கான…

Pongal Gift: பொங்கல் தொகுப்பு – என்னென்ன பொருட்கள் கொடுக்கப்படும்? கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு

Posted by - December 13, 2024 0
இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/-…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *