பூனை மீசை .. சிறுநீரகத்தை காக்கும் அற்புத மூலிகை.. சிறுநீரக கற்களை நொறுக்கும் “யானை வாங்கி”.. சபாஷ்

244 0

சென்னை:

சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யும் மூலிகைகள் என்னென்ன தெரியுமா? அதில் ஒருசிலவற்றின் நன்மைகளை பார்ப்போம்..!!

சிறுநீரகத்தில் வலி இருக்கலாம்.. கற்கள் இருக்கலாம்.. தொற்று இருக்கலாம்.. வீக்கம் இருக்கலாம்.. இதுபோன்ற கோளாறுகளுக்கெல்லாம் வீட்டு மருத்துவத்தை நம்பியிருக்க கூடாது. உடனடியாக டாக்டர்களிடம் செல்ல வேண்டும்.

ஆனால், முறையான மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இருந்தால், சிறுநீரக தொற்றுக்களை தடுக்கலாம்.. கற்கள் ஏற்படாமலும் தடுக்கலாம்.பூனை மீசை .. சிறுநீரகத்தை காக்கும் அற்புத மூலிகை.. சிறுநீரக கற்களை  நொறுக்கும் "யானை வாங்கி".. சபாஷ் | Do you know the Amazing Uses of Poonai  Meesai Mooligai and what are the ...

தேங்காய் தண்ணீருடன் எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தாலே சிறுநீரகத்துக்கு மிகவும் பாதுகாப்பு என்கிறார்கள். அந்தவகையில், எத்தனையோ காய்கறிகள், பழங்கள்,, தானியங்கள் சிறுநீரக பாதுகாப்புக்கு உதவுகின்றன.. அந்தவகையில், ஒருசில மூலிகைகளை பார்ப்போம்.

நீர்முள்ளி:

நீர்முள்ளி என்ற முட்கள் நிறைந்த மூலிகை உள்ளது.. பெரும்பாலும் இது, ஆண்களின் குறைபாடுகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது.. ஆனாலும், சிறுநீரக நோய்களையும் வாத நோய்களையும் எதிர்த்து நிற்கக்கூடியது இந்த நீர்முள்ளி விதைகள்.. இந்த நீர்முள்ளியுடன், சுரைக்கொடி, நெருஞ்சில், வெள்ளரி விதை, சோம்பு, கடுக்காய்த் தோல், நெல்லிக்காய், சரக்கொன்றைப் புளி போன்றவற்றை சேர்த்து, ஒரு பானை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து மருந்தாக தருவார்கள்.

இதனால், தடையில்லாமல் சிறுநீர் இறங்கி, சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.. அதேபோல, இந்த நீர்முள்ளிச் சாம்பலையும் நாயுருவிச் சாம்பலையும் நீரில் கலந்து சிறுநீரக நோய்களுக்கு பயன்படுத்துவார்கள்.. இந்த நீர்முள்ளிச் சாம்பலை வெந்நீரில் கரைத்து வீக்கம் உள்ள இடங்களில் பூசுவார்கள்..

யானை வாங்கி:

அதேபோல, சிறுநீரகக் கோளாறுகளை சரிசெய்யக்கூடிய மூலிகை, “யானை வணங்கி” அதாவது பெரு நெருஞ்சில் என்பார்கள்.. சர்வ சாதாரணமாக வயல் வெளிகளில், நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வளர்ந்திருக்கும் செடி.. சிறுநீரக நோய்களுக்கு வலி நிவாரணியாக இதை பயன்படுத்துவார்கள். இந்த பெரு நெருஞ்சில் செடியை, வேர்களுடன் எடுத்து, சுத்தம் செய்து 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சி குடித்தால், சிறுநீரக கற்கள் எல்லாம் உடைந்து சிறுநீரின் வழியே வெளியேறிவிடும்.

இதில், பூனை மீசை மூலிகையின் பங்கு அபாரமானது.. அதாவது, ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்கும் சக்தியை கொண்டது இந்த பூனை மீசை மூலிகைக்கு உள்ளது. இந்த செடியின் பூக்கள், பார்ப்பதற்கு பூனை மீசை போலவே இருக்கும் என்பதால், இந்த பெயர் வந்ததாம்… துளசி இலை போலவே இருக்கும். அதனால், சீரக துளசி, ஜாவா தேயிலை என்றும் சொல்கிறார்கள்.

நெல்லிக்காய்:

இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து, தினமும் நெல்லிக்காய் அளவு 2 வேளை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயலிழப்பு உட்பட சிறுநீரக கோளாறுகள் அத்தனையும் நீங்கிவிடும். சிறுநீரக பாதிப்பு என்றாலே நீரிழிவு நோயையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.. சர்க்கரை நோய் அதிகமாகிவிட்டால், அதை கட்டுக்குள் கொண்டுவர இந்த மூலிகை உதவுகிறது..

சிறுநீரக உபாதைகளை தவிர, ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்த பிரச்சனைக்கும், இந்த மூலிகை உபயோகமாகிறது.. அதனால்தான், சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சர்க்கரை அளவு:

உடலில் தேவையில்லாத உப்புக்கள், மற்றும் கெட்ட நீரை வெளியேற்றுகிறது இந்த பூனை மீசை. அதாவது, ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாடின் அளவை குறைக்க செய்வதுடன், ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற செய்வதால், உடல் எடையும் வெகுவாக குறைகிறது.. அத்துடன், சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், இந்த மூலிகையே அவைகளை கரைத்து வெளியேற்றிவிடும்.

Related Post

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது அதிமுக, விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – அதிமுக ட்வீட்

Posted by - December 28, 2022 0
அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என…

நான் கைதாகவில்லை, நடந்தது இதுதான்.. பிக் பாஸ் தினேஷ் உண்மையை விளக்கி வெளியிட்ட வீடியோ

Posted by - November 14, 2025 0
சீரியல் நடிகர் தினேஷ் தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் பிரபல நடிகை ரச்சிதாவை காதல் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.…

கனமழைக்கு வாய்ப்பு

Posted by - September 26, 2023 0
#Rain | #RainAlert | #ChennaiRains | #Weather | #pixeltv | #pixelmedia தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்…

பட்டுபோன்ற மென்மையான நீளமான கூந்தலை பெறணுமா? அப்ப ‘இந்த’ 7 உணவுகளை மறக்காம சாப்பிடுங்க!

Posted by - December 26, 2023 0
ஆண், பெண் என அனைவரும் தங்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்கள். நவீன வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், தலைமுடி பாதிப்படைகிறது.…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Posted by - May 17, 2023 0
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப் படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *