பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?

122 0

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய்க்கு சவாலளிக்கும் வகையில் அவரது பெயரில் பல்வேறு சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் அவர் பெரம்பூர் தொகுதியிலும், தொடர்ந்து ஏப்ரல் இரண்டாம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியிலும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை ஒரே கட்டமாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜோசப் விஜய் பெயரில் இத்தனை வேட்பாளர்களா?

பொதுவாக சட்டமன்றத் தேர்தல் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தங்களுக்கு சவாலாக திகழ்வார்கள் என்றால் பிற கட்சிகள் எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயரில் சுயேட்சை வேட்பாளர்களை களம் இறக்குவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். பெரம்பூர் தொகுதியில் மட்டும் 66 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். சென்னையில் பெரம்பூர் தொகுதியில் தான் அதிக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  அதே சமயம் திருச்சி கிழக்கு தொகுதியில் கே.விஜய் என்ற சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் பெயரின் பல்வேறு சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் ஆர்.எஸ்.முருகன் பெயரில் பி.முருகன், எஸ் முருகன் பெயரில் இரண்டு பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். எனினும் வேட்புமனு பரிசீலனையில் சிலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது ஒரே பெயரில் எத்தனை பெயர் போட்டி என்பது தெரிய வரும்.

Related Post

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23ல் ஒரே கட்டமாக தேர்தல்: மே.4ல் வாக்கு எண்ணிக்கை

Posted by - March 15, 2026 0
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை…

மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000

Posted by - March 3, 2026 0
முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.…

புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்…..

Posted by - December 15, 2025 0
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக…

கப்சிப் விஜய்.. அரசியல் பக்குவம் இல்லையா? காட்டிகொடுத்த மாநாடு

Posted by - August 22, 2025 0
Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், மதுரையில் நடத்திய பெரிய அரசியல் மாநாடு தற்போது வைரலாக பேசப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள்…

ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?

Posted by - January 7, 2026 0
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *