காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? – சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

128 0

சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து தோற்ற பின் இந்த பக்கமே வரவில்லை.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுவதை கார்த்தி சிதம்பரம் எம்.பி., கடுமையாக விமர்சித்துள்ளார்.

காரைக்குடியில் களமிறங்கிய சீமான்

ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வழக்கம்போல இந்த முறையும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் என 234 தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவகங்கை மாவட்டம் சீமானின் சொந்த ஊர் என்பதால் அங்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

விமர்சித்த கார்த்தி சிதம்பரம்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் சீமானை சரமாரியாக விமர்சித்தார். அதன்படி, “சீமானுக்கும் இந்த தொகுதிக்கும் சம்பந்தம் கிடையாது. அவர் இந்த பகுதியில் வசிப்பவர் இல்லை. சீமானுக்கு காரைக்குடியில் ஓட்டும் கிடையாது. அவர் இங்கு வந்தால் ஹோட்டலில் தான் தங்க வேண்டும். எப்போதும் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு பழக்கம் உண்டு. அதாவது ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தொகுதியிலும் புதுப்புது வேட்பாளர்களை நிறுத்துவது அவர்களது பழக்கமாகும். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் இருந்து வந்த எழிலரசி என்பவரை சீமான் இங்கு வேட்பாளராக நிறுத்தினார். நான் அவர்களை ஒருமுறை தான் பார்த்தேன். அந்த எழிலரசி தேர்தலில் தோற்று போனார். அதன்பிறகு அந்த பெண் இந்த ஊரில் வந்து எதுவும் சேவை செய்யவில்லை.

இதனிடையே சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ம் ஆண்டு தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து தோற்ற பின் இந்த பக்கமே வரவில்லை. இது எல்லாரும் பேசும் வசனம் தான். தொகுதிக்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் தோற்றாலும் ஜெயித்தாலும் தொகுதிக்குள் இருப்பார்கள்.

அதனால் சீமான் இந்த தேர்தலில் தோற்றால் காரைக்குடி பக்கம் கட்சி நிகழ்ச்சி தவிர எதற்கும் வரமாட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பல்வேறு வேட்பாளர்கள் தற்போது அந்த கட்சியில் கூட இல்லை. புது வேட்பாளர்களை போட்டு விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என சொல்வார்கள். இந்த தொகுதிக்கும் சீமானுக்கும் சம்பந்தமில்லை. அவருக்கு காரைக்குடி மக்கள் நன்கு விருந்தோம்பல் செய்து அனுப்புவார்கள் என கார்த்தி சிதம்பரம் எம்.பி., தெரிவித்துள்ளார். சீமான் கடந்த முறை சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.?

Posted by - March 12, 2026 0
தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக…

அரசியலில் தனித்து விடப்பட்டதால் அந்தர் பல்டி.?!

Posted by - February 21, 2026 0
அரசியலில் தனித்து விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், விபரீதமான முடிவு ஒன்றை எடுக்க உள்ளதுபோல் தெரிகிறது. இன்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய அவர், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்…

விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!

Posted by - February 4, 2026 0
தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என கூறியுள்ளார்.…

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

Posted by - March 16, 2026 0
தமிழக அரசி​யல் களம் குறித்து கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ)…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *