யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தவெக தலைவர் விஜய் கண்டனம்!

152 0

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் நான்கு சிறுவர்கள் வடமாநில இளைஞரான சிராஜை (மத்திய பிரதேசம்) பட்டாகத்தியால் தாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலானது தமிழகத்தில் இளைஞர்களின் தவறான போக்குகளையும், சமூக வலைதளங்களின் தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிறுவர்களிடம் இருந்து பட்டாகத்திகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது” என்று கேள்வி எழுப்பிய அவர், இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை அரசு முன்கூட்டியே தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். போதைப்பொருள் நடமாட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை, கல்வி சூழல் இல்லாமை ஆகியவை இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். “இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற அரசின் அலட்சியம்” என்று விமர்சித்தார்.

விஜய், எஞ்சிய ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள்களை முழுமையாக கட்டுப்படுத்த அரசை வலியுறுத்தினார். “சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப்பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இளைஞர்களை நல்வழிப்படுத்தும் திட்டங்கள் இல்லை” என்று கூறிய அவர், அரசின் கொள்கைகளை கடுமையாக சாடினார்.

Related Post

Generated Image November 19 2025 10 32AM e1763528556825

பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். – என்ன செய்யப் போகிறது திமுக?

Posted by - November 19, 2025 0
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல்…
Gemini Generated Image 6nw0d46nw0d46nw0

தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் பரப்புரை

Posted by - April 11, 2026 0
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்று ஏதேனும் இருக்கிறதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்…
Generated Image November 17 2025 11 34AM

தாக்கும் காங்கிரஸ்… தயங்கும் திமுக! – என்ன மாயம் செய்தார் ராஜேந்திர பாலாஜி?

Posted by - November 17, 2025 0
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இம்முறை சிவகாசியில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் திமுக மவுன சாட்சியாக நிற்பது…
Generated Image November 13 2025 5 02PM

பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.?

Posted by - November 13, 2025 0
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.?…
Generated Image November 20 2025 10 31AM

மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு

Posted by - November 20, 2025 0
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயிலும் மக்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *