’அண்ணாமலை பெஸ்ட் – கூட்டணியை விட்டு வெளியேற காரணம் இதுதான்’ டிடிவி தினகரன் அதிரடி..!

198 0

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது என்பதை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் அறிவார்கள் என்றும், எங்களுக்கு என்ன இடர்பாடு என்பதை அறிந்த அவர்கள் அதனை சரிசெய்தால் மீண்டும் NDA கூட்டணிக்கு செல்வது குறித்து பரிசீலனை செய்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதோடு, கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், எங்கள் தொண்டர்களின் கருத்தால் மட்டுமே வெளியேறியதாகவும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

எதற்கும் அடிபணியமாட்டேன்

தான் எதற்கும் எந்த அழுத்தத்திற்கும் அடி பணிய மாட்டேன் என்றும் அந்த தைரியம் ஜெயலலிதாவிடமிருந்து தனக்கு வந்ததாகவும் கூறியுள்ள டிடிவி தினகரன், விரைவில் கூட்டணியை அறிவிப்போம் என்றும் நாங்கள் பங்குபெறும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையவேண்டும் என்பதுதான் முதல் விருப்பம் என்றும் அதற்கு அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

நயினார் சரியில்லை ; அண்ணாமலை பெஸ்ட்

அதுமட்டுமின்றி, ஒபிஎஸ்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியபோது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவத்தனமானது என்றும் அவர் கூட்டணி கட்சிகளை கையாளும் விதம் சரியில்லை என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை மாநில தலைவராக இருந்தவரை கூட்டணியை அவர் சரியாக கையாண்டார் என்றும் நயினாருக்கு அண்ணாமலை மாதிரி செயல்பட தெரியவில்லை என்றும் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Post

தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு: முதல்வருக்கு உதயநிதி வேண்டுகோள்

Posted by - December 15, 2025 0
திரு​வண்​ணா​மலை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார். திரு​வண்​ணா​மலை​யில்…

அதிமுகவில் இணைந்தது ஏன்?

Posted by - March 13, 2026 0
அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள்: ஆட்சி மாற்றம், மரண தண்டனை குறித்த பரபரப்பு பேச்சு! நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வந்த காளியம்மாள்…

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் – பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..

Posted by - March 15, 2026 0
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆசிரியர்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின் என்ற கெட்டப்பெயர் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் திமுக ஆட்சி…

அரசியலில் தனித்து விடப்பட்டதால் அந்தர் பல்டி.?!

Posted by - February 21, 2026 0
அரசியலில் தனித்து விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், விபரீதமான முடிவு ஒன்றை எடுக்க உள்ளதுபோல் தெரிகிறது. இன்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய அவர், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்…

“செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை எழுப்புகிறது” – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
சென்னை: நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறத என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *