ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் – வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?

261 0

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 6 அமைச்சர்களுக்கு வழக்குகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சில அமைச்ச்சர்களுக்கு, பழைய வழக்குகள் தற்போது வினையாக உருவெடுத்துள்ளது.

ஆட்சி கிட்டுமா?

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. அந்த வெற்றியை தக்கவைத்து 2026ம் ஆண்டும் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என ஸ்டாலின் தற்போது பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளார். அதற்காக வலுவான கூட்டணியை கட்டமைத்துள்ளார். ஆனால், அவரது ஆசை நிறைவேறுமா? மீண்டும் ஆட்சி கிட்டுமா? என்பது தான் தற்போது பெரும் கேள்வியாக உள்ளது. அதற்கு காரணம், அவரது அமைச்சரவையில் உள்ள நபர்கள் மீதுள்ள வழக்குகள் தான். அதுவே திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

ஹிட் லிஸ்டில் அமைச்சர்கள்:

தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் தற்போது வழக்குகளில் சிக்கி தவிக்கின்றனர். அவற்றின் மீதான விசாரணையின் முடிவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் சில அமைச்சர்கள் மீதான வழக்குகள் மத்திய புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல அதிரடி சம்பவங்கள் தமிழக அரசியலில் அரங்கேறலாம் என கூறப்படுகிறது.

நெருக்கடியில் 6 அமைச்சர்கள்:

1. செந்தில் பாலாஜி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2. பொன்முடி: அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய விதமாக பேசிய வழக்கில் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த நீதிமன்றம், அதனை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

3.துரைமுருகன்: திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் முன்பு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை கீழமை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

4.MRK பன்னீர் செல்வம்: கடந்த 1996- 2001 மற்றும் 2006 – 2011 ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.  இதனை ரத்து செய்த கீழமை நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. அனிதா ராதாகிருஷ்ணன்: வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு அமலாக்கத்துறையிடம் விசாரணையில் உள்ளது.

6. கே.என். நேரு: தமிழ்நாடு அமைச்சரவையின் மற்றொரு முக்கிய நபரான கே.என். நேருவின் சகோதரர் வீடுகளில் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தலை தப்புமா?

இதனால், சட்டமன்ற தேர்தல் நேருங்கும் நேரத்தில் யார் யார் பதவிகள் பறிபோகும்? யார் வெளியே இருப்பார்கள், யார் சிறைக்கு செல்வார்கள்? யார் தலை உருளும் என பெரிய கணக்குகள் ஓடிக்கொண்டுள்ளன. இதனால் அடுத்த சில மாதங்களிலேயே தமிழ்நாட்டில் தேர்தல் சூடு அனல் பறக்க தொடங்க வாய்ப்புள்ளது.

Related Post

storm 1 1

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - December 4, 2023 0
வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- விடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில்…
weather

“தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!” – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

Posted by - May 1, 2026 0
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில்…

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?

Posted by - July 18, 2025 0
அஜித்குமார் மரண வழக்கின் தாக்கம் குறைவதற்கு முன்பே, மயிலாடுதுறை டிஎஸ்பி உயர் அதிகாரிகள் மீது அளித்த குற்றச்சாட்டு திமுகவிற்கு பெரும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறையால் ஆளுங்கட்சியான…

பேனர் வைக்கக் கூடாது – அதிரடி உத்தரவிட்ட நடிகர் விஜய்.. ஊக்கத்தொகை வழங்கும் விழாவுக்காக பறந்த உத்தரவு!

Posted by - June 15, 2023 0
Actor Vijay : 10, +2 மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத் தொகை வழங்கும் விழா குறித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதைத்…
Generated Image November 22 2025 6 06PM

ஊர் எல்லையில் கிடந்த சடலம்!! “காதல் தோல்வியால் உயிரைவிட்ட இளம்பெண்..” காத்திருந்து பழிவாங்கிய தாய் மாமன்..!

Posted by - November 22, 2025 0
மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞரை  சரமாரியாக வெட்டி கொன்ற வழக்கில் 4-பேர் கைது. மேலும் ஒருவருக்கு வலைவீச்சு. அக்கா மகளை காதலித்து திருமணம் செய்யாததால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *