மிரளப் போகும் கோவை! களத்தில் இறங்கும் விஜய்! என்ன ப்ளான்? சம்பவம் லோடிங்!

263 0

கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெற உள்ளது.

கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் இந்த கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார்.

இதற்காக விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை செல்கிறார். இன்று மாலை 3 மணிக்கு குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு தொடங்க உள்ளது.

12 ஆண்டுகளுக்கு பிறகு கோவை செல்லும் விஜய்க்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தவெக தொண்டர்கள் விமான நிலையத்தில் காத்துக்கிடக்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கும் த.வெ.க தலைவர் விஜய், இன்று கோவையில் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

விமான நிலையம் முதல் விஜய் தங்க உள்ள ஹோட்டல் வரைக்கும் வரவேற்பு அளிக்க தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். தனி விமானம் மூலம் கோவைக்கு காலை 11.10 மணிக்கு செல்லும் விஜய், அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார். சென்னையில் இருந்து விஜய் 10 மணிக்கு புறப்படுவார் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் விஜய் கோவையில் ரோடு ஷோ செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து அவர் தங்க இருக்கும் ஹோட்டல் வரை ரோடு ஷோ நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கருத்தரங்கு மாலை 3 மணிமுதல் 7 மணிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி நடக்கும் இடம் கல்லூரி வளாகம் என்பதால் விஜய் பேசுவதை மட்டும் நேரலையில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களாக தொகுதி வாரியாக பிரித்து வைத்துள்ளனர். அதன்படி இன்று 9 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மீதமுள்ள 9 மாவட்ட நிர்வாகிகள் நாளை பங்கு பெறுகின்றனர். இன்று மட்டும் 700 பூத் கமிட்டி உறுப்பினர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.

விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக அவரின் பாதுகாப்புக்காக வரும் துபாய் பவுன்சர்களும் இன்று அவருடன் வர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

add a breaking news banner and pixeltamilcom text

நட்டாற்றில் தவிக்கும் சி.வி.சண்முகம் டீம்- அடுத்தது என்ன.?

Posted by - May 20, 2026 0
CV Shanmugam vs EPS : அமைச்சர் பதவி கிடைக்கும் என எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகத்தை நம்பி வந்த அதிமுக ஒரு பிரிவு எம்எல்ஏக்களுக்கு தவெக கை…

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு!

Posted by - March 28, 2023 0
Ops eps case | அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதிமுக பொதுக்குழு…

ஆயுர்வேதத்தின் படி தொப்புளில் இந்த எண்ணெய் வைப்பது உங்களுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்குமாம்…!

Posted by - December 13, 2023 0
பழமையான இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம், நாபிகா மர்மா என்றும் அழைக்கப்படும் தொப்புளை பல உடல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கிய இடமாக கருதுகிறது. தொப்புளில் எண்ணெய்…

சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்

Posted by - May 2, 2025 0
சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிஎஸ்இ 5ஆம்…

தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

Posted by - October 18, 2025 0
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *