வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

140 0

கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தனது காரை விற்பனை செய்வதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த கும்பகோணம் சென்னியமங்கலத்தை சேர்ந்த வீரசெல்வம் என்பவர் கார் குறித்து விசாரித்துள்ளார். மேலும், வால்பாறை வரையெல்லாம் வர முடியாது, வேண்டுமானால் காரை எடுத்துகொண்டு கும்பகோணம் வாருங்கள், அதற்கான பணத்தை நான் தறுகிறேன் என கூறியுள்ளார்.அதனை நம்பிய சக்திவேல் , வால்பாறையில் இருந்து கும்பகோணத்திற்கு காரை எடுத்து சென்றுள்ளார். சாக்கோட்டை பகுதியில் சக்திவேலை சந்தித்த வீரசெல்வம், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிகொள்வதாக கூறியுள்ளார். வழக்கம்போல இதையும் நம்பிய சக்திவேல் அதற்கு சம்மதித்துள்ளார்.

இதனையடுத்து, ஓட்டி பார்ப்பதற்காக காரை எடுத்து சென்ற வீரசெல்வம் கடைசி வரை திரும்பி வரவில்லை. இது குறித்து சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில், காரை திருடி சென்ற வீரசெல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

Related Post

3 பேரை திருமணம் செய்து மோசடி.எஸ்கேப்.. சிக்கிய கல்யாண ராணி..!

Posted by - April 18, 2023 0
2 குழந்தைகளுக்கு தாயானவர் புதுமணப் பெண் எனக் கூறி பல திருமணங்களை செய்து மோசடி செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம்,…

இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

Posted by - June 2, 2025 0
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் திமுக தொண்டர்கள் இலையிலேயே படுத்து உறங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.…

”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

Posted by - December 27, 2022 0
செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன் நம்மை விரட்டியே…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - December 4, 2023 0
வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- விடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில்…

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *