விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?

161 0

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டால் அவருக்காக அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து 3வது முறையாக தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி. 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஈவேரா திருமகன் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அவர் உயிரிழந்த பிறகு நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி MLA ஆனார். தற்போது அவரது மறைவை தொடர்ந்து மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி.

2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அரசியலில் entry கொடுத்துள்ள விஜய் இந்த இடைத்தேர்தலில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கான ட்ரைலராக திமுகவுக்கு எதிராக இடைத்தேர்தலில் போட்டி போடலாமா என விஜய் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மற்றொரு பக்கம் அதிமுகவின் திட்டம் என்ன என்பதை சுற்றி கேள்விகள் வலம் வருகின்றன. ஏற்கனவே விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டி போடவில்லை என பின்வாங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். அதனால் இந்த முறையும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ள அதிமுக, அதனை கணக்கு போட்டும் தேர்தலை புறக்கணிக்க வாய்ப்பிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. விஜய்யின் தவெக இடைத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தேர்தல் களம் திமுக vs தவெக என மாறும் என்பதை கணக்கிட்டே அதிமுக காய்களை நகர்த்தவிருப்பதாகவும் சொல்கின்றனர். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போலவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் விஜய் புறக்கணிப்பாரா அல்லது திமுகவுக்கு எதிரான போட்டியாக களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Related Post

திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5 ஜி சேவை தொடக்கம் – 134 நகரங்களில் 5 ஜி அளித்து சாதனை

Posted by - January 19, 2023 0
Jio 5G in Tiruppur : ஜியோ 5ஜி தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை…

தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.3) முதல் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை (நவ.4) மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட்…

உங்களுக்கு ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப இரும்புசத்து குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கு… உடனே இத சாப்பிடுங்க!

Posted by - October 25, 2023 0
நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும், நம் உடலின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இரும்புசத்து நம் உடலுக்கு மிகவும் அவசியமான…

தமிழக அரசு பஸ்கள் இயங்கவில்லை- பயணிகள் அவதி

Posted by - January 9, 2024 0
புதுச்சேரி: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில்…

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

Posted by - November 4, 2025 0
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்க 5 மணி நேரம் தாமதமானது ஏன் என்பது குறித்து மாநகரக் காவல் ஆணையர்  சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து …

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *