ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

177 0

சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இந்நிலையில், திருமாவளவன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்

அப்போது திருமாவளவன் சென்ற கார், முன்னாள் சென்ற ஒரு ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த வழக்கறிஞர், அதை சாலையில் நிறுத்தி விட்டு ”ஏன் எனது ஸ்கூட்டர் மீது மோதினீர்கள்” என்று கேட்டுள்ளார். அப்போது திருமாவளவன் காரில் இருந்தவர்கள் அந்த வழக்கறிஞரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வழக்கறிஞரை தாக்கிய விசிகவினர்

மேலும் வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிய அவர்கள் அவரின் ஸ்கூட்டரையும் ஆவேசமாக தள்ளி சேதப்படுத்தினர். வழக்கறிஞரை தாக்கிய விசிகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்கள்.

ஆனாலும் விசிகவினர் அந்த வழக்கறிஞரை விடாமல் துரத்தி தாக்கியதால் அவர் உடனடியாக நீதிமன்ற வளாகத்துக்குள் சென்றார். தொடர்ந்து திருமாவளவனுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

விசிகவினர் மீது நடவடிக்கை வேண்டும்

நடுரோட்டில் வழக்கறிஞரை விசிகவினர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வழக்கறிஞரை தாக்கிய விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.விசிகவினரின் செயலுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, ”பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில் வி.சி.க (VCK) ரவுடிகள் ஒரு வழக்கறிஞரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கறிஞர், தான் மீது மோதிய கார் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டதற்காகத் தாக்கப்பட்டார். இந்த கார், வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களை ஏற்றிச் சென்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் திருமாவளவன் இந்தியத் தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் அவரது கட்சியினர் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர்” என்றார்.

Related Post

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை:கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி

Posted by - January 6, 2026 0
பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு…

வெள்ளிக்கிழமை எந்த சாமியைக் கும்பிடணும்? செல்வம், அமைதி, குடும்ப வளர்ச்சிக்கான முக்கிய வழிபாடுகள் 2025ல் வைரல்!

Posted by - December 12, 2025 0
2025ல் ஆன்மீக ஆர்வம் அதிகரிச்சதோட, “வெள்ளிக்கிழமை எதை கும்பிடணும்? எது செல்வத்துக்கு நல்லது?”ன்னு Google-ல search பண்ணுறவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. அதனால Friday devotional updates இப்போ…

தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை! தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை;அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Posted by - November 27, 2025 0
தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. தஞ்சாவூரில் திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொடூரமாக வெட்டிக்…

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: யாரெல்லம் தகுதியானவர்கள்; விண்ணப்பிப்பது எப்படி… முழு விவரம்!

Posted by - April 22, 2024 0
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித…

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் – இப்படியா பண்றது?

Posted by - May 13, 2025 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இரு தலைவர்களுக்கிடையே எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. ஸ்டாலின், இபிஎஸ்-ன் பதிவுகள் என்ன.? பார்க்கலாம்……

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *