அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!

139 0

வங்கியின் வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமலே வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதியை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போல வங்கி கணக்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒருவரின் பொருளாதார ரீதியான வரவு, செலவுகளுக்கும், சேமிப்புகளுக்கும் முக்கியமான அங்கமாக வங்கி உள்ளது. வங்கிச் சேவையை நாட்டில் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவே ஆகும்.

அக்கவுண்டை மாற்றாமலே வங்கியை மாற்றலாம்:

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் செயல்பாட்டையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி புதிய நடைமுறை ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் என்ற புதிய செயல்முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதாவது, ஒரு வங்கியில் பயன்படுத்திய வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியே இந்த பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் ஆகும். பொதுவாக, ஒருவரின் வங்கிக்கணக்கு எண்ணுடன் மியூச்சுவல் பண்ட், சம்பளகணக்கு, கடன் தவணை போன்ற பல்வேறு முக்கியமான விவரங்கள் தொடர்பில் இருக்கும். இதனால், வங்கிக்கணக்கை மாற்றும்போது அனைத்து சேவைகளிலும் புதுப்பிக்கும் சூழல் உண்டாகும்.

பலன்கள் என்னென்ன?

ஆனால், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் வங்கியை மாற்றிக்கொண்டாலும் வங்கிக்கணக்கு எண் மாறாது. அனைத்து பேமெண்ட் மேண்டேட்களும் தானாகவே மாறிவிடும். மேலும், இஎம்ஐ முறையும் மாறாமல் புதிய வங்கியில் இருந்து தானாகவே பிடித்தம் செய்து கொள்ளப்படும். வங்கியின் சேவை பிடிக்காவில் வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதி எளிதாக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி இந்த முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்புத் தொகை கணக்கு, நடப்புக் கணக்கு, தொடர்பு வைப்பு கணக்கு எண் ஆகிய கணக்குகள் உள்ளது. பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கே பயன்படுத்துவார்கள்.

வர்த்தகம் செய்பவர்கள், வியாபாரிகள் நடப்புக்கணக்கு பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். ஏனென்றால், வங்கியில் கடன் வாங்குவதற்கு இந்த கணக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ரிசர்வ் வங்கி கொண்டு வர உள்ள இந்த செயல்முறையானது எந்த வங்கிக்கணக்கு பயனாளர்களுக்கு? என்ற தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் சேமிப்பு வங்கிக் கணக்கு பயன்படுத்துபவர்களுக்கே இந்த சேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

மாட்டு சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்…மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - June 19, 2025 0
மாட்டு சாணங்களில் இருந்து செய்யப்படும் எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து ஒரு தொழில் அல்லது வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதற்கான சந்தை மற்றும் அதன் வர்த்தக…

எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!

Posted by - March 26, 2025 0
டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு, அதிமுக- பாஜக கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர். இபிஎஸ் முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு பிறகே அதிமுக பாஜக கூட்டணி மீண்டும்…

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! – மோடி கேரண்டி என்ற பெயரில் தேர்தல் அறிக்கை!

Posted by - April 14, 2024 0
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம்…

paytm, phonepe, gpay அதிகம் பயன்படுத்துவரா? ஆர்பிஐ எடுக்கும் அதிர்ச்சி முடிவு

Posted by - November 28, 2022 0
3rd Party  UPI ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் வரம்பை (volume cap) கட்டுப்படுத்த, நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது முன்மொழியப்பட்ட காலக்கெடுவை விரைவில்…

பிரபல வங்கிக்கு ரிசரவ் பேங்க் திடீர் தடை.. உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?

Posted by - April 25, 2024 0
பிரபல வங்கிக்கு ரிசரவ் பேங்க் திடீர் தடை.. உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா? நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *