அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி

49 0

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 426 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப் பிரிவுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிப்ரவரி 9ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பிப்பது எப்படி? என்ன தகுதி? வயது வரம்பு ஆகியவை குறித்து விரிவாக அறியலாம்.

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கு பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன. மேலும், 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன.

1,277 பேர் பணியமர்த்தல்

ஆரம்பத்தில் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் முதற்கட்டமாக 574 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்படவும், பின்னர் 823 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தற்காலிகமாக 1,277 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கு 306 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு ஆணையிடப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பணியிடங்கள் சேர்க்கை பெறாத 120 பணியிடங்களும் சேர்த்து ஆக மொத்தம் 426 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படவுள்ளது. இதற்குத் தேர்வர்கள் 09.02.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை, கோவை, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய எட்டு மண்டலங்களில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

எஸ்சி, எஸ்டி – ரூ.100

பிற பிரிவினர் – ரூ.250

வயது வரம்பு

அதிகபட்ச வயது 57

கல்வித் தகுதி

முதுநிலை பட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் 55% பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட பழங்குடியினர் /பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / மாற்றத்திறனாளி பிரிவினர் ஆகியோர் 50% மதிப்பெண் பெற்றிருத்தல் போதுமானது. உடன், பி.எச்டி அல்லது NET / SLET / SET ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருத்தல் அவசியம்.

கௌரவ விரிவுரையாளர்கள் தங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் கல்வியில் மதிப்பீடு 85 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் 15 மதிப்பெண்கள் ஆகியவற்றில் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் 100-ன் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். அரசின் வழக்கமான இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும்.

விண்ணப்ப நடைமுறைகள்

விண்ணப்பப் பதிவு செய்தல்

விண்ணப்ப விவரங்களை உள்ளிடுதல்

சான்றிதழ்கள் பதிவேற்றுதல்

புதிய விண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல்

https://www.tngasa.org/pdf/TNGAS-GL-Instruction-Tamil.pdf என்ற இணைப்பில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட வாரியான காலி பணியிடங்களின் விவரம் https://www.tngasa.org/pdf/district-wise-GL-New.pdf என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த முழு விவரங்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 35 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை

Posted by - June 20, 2024 0
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும்…

போலீஸ் போட்ட 33 நிபந்தனைகள்.. திராவிட கட்சிகளுக்கு சவால் விட்டு சரித்திரம் படைப்பாரா TVK விஜய்?

Posted by - September 26, 2024 0
சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் கொடியும், கொடிப்பாடலும் சமீபத்தில் அவரே வெளியிட்டார். கொடி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில்…

முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

Posted by - November 8, 2024 0
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக…

போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் 700 பேர் கைது – சென்னை அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் முற்றுகை

Posted by - December 31, 2025 0
சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகிய முக்கிய இடங்களை முற்றுகையிட முயன்ற 700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை…

தனியார் உணவகம் பெயரில் நூதன மோசடி: கைதான கர்நாடக வாலிபர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை

Posted by - December 14, 2023 0
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகர், கீரைக்கார தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 47). இவர் பிரபல தனியார் துரித உணவகத்தின் கிளையை அரியலூரில் தொடங்குவதற்காக முடிவெடுத்தார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *