Generated Image February 06 2026 10 48AM

அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி

72 0

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 426 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப் பிரிவுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிப்ரவரி 9ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பிப்பது எப்படி? என்ன தகுதி? வயது வரம்பு ஆகியவை குறித்து விரிவாக அறியலாம்.

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கு பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன. மேலும், 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன.

1,277 பேர் பணியமர்த்தல்

ஆரம்பத்தில் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் முதற்கட்டமாக 574 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்படவும், பின்னர் 823 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தற்காலிகமாக 1,277 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கு 306 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு ஆணையிடப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பணியிடங்கள் சேர்க்கை பெறாத 120 பணியிடங்களும் சேர்த்து ஆக மொத்தம் 426 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படவுள்ளது. இதற்குத் தேர்வர்கள் 09.02.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை, கோவை, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய எட்டு மண்டலங்களில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

எஸ்சி, எஸ்டி – ரூ.100

பிற பிரிவினர் – ரூ.250

வயது வரம்பு

அதிகபட்ச வயது 57

கல்வித் தகுதி

முதுநிலை பட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் 55% பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட பழங்குடியினர் /பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / மாற்றத்திறனாளி பிரிவினர் ஆகியோர் 50% மதிப்பெண் பெற்றிருத்தல் போதுமானது. உடன், பி.எச்டி அல்லது NET / SLET / SET ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருத்தல் அவசியம்.

கௌரவ விரிவுரையாளர்கள் தங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் கல்வியில் மதிப்பீடு 85 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் 15 மதிப்பெண்கள் ஆகியவற்றில் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் 100-ன் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். அரசின் வழக்கமான இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும்.

விண்ணப்ப நடைமுறைகள்

விண்ணப்பப் பதிவு செய்தல்

விண்ணப்ப விவரங்களை உள்ளிடுதல்

சான்றிதழ்கள் பதிவேற்றுதல்

புதிய விண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல்

https://www.tngasa.org/pdf/TNGAS-GL-Instruction-Tamil.pdf என்ற இணைப்பில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட வாரியான காலி பணியிடங்களின் விவரம் https://www.tngasa.org/pdf/district-wise-GL-New.pdf என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த முழு விவரங்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Post

ராமேசுவரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள்

Posted by - February 20, 2023 0
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது…

மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்று தெரியுமா?- அழகிய குடும்ப போட்டோ

Posted by - May 2, 2024 0
குக் வித் கோமாளி 5 தொழில் வளர்ச்சி என்பது அனைவருக்குமே எடுத்தவுடன் வெற்றி தராது, அதற்காக நிறைய முயற்சி, உழைப்பை போட வேண்டும். அப்படி ஆரம்பத்தில் இருந்து…

கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாக கூறி வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.82 ஆயிரம் மோசடி

Posted by - June 27, 2023 0
போரூர்: ராமாபுரம், ராயலா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி ஆரோக்கியராஜ். ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு…

முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

Posted by - November 8, 2024 0
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக…

”கருணாநிதி காலத்து டெக்னிக், சோத்துல கல்லு” ஷூட்டிங் ஓவரா? ஸ்டாலினை நக்கலடித்த ஈபிஎஸ்

Posted by - April 11, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகளை கண்டித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மறைந்த கருணாநிதி காலத்து டெக்னிக்கை பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *