கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாக கூறி வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.82 ஆயிரம் மோசடி

307 0

போரூர்:

ராமாபுரம், ராயலா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி ஆரோக்கியராஜ். ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம பெண் “வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுகிறேன். உங்களது கிரெடிட் கார்டின் தொகை வரம்பை மேலும் ரூ.50ஆயிரம் அதிகரித்து தருகிறேன்” என்று கூறினார்.கிரெடிட் கார்ட் பேமெண்டை தவணை முறையில் கட்டப்போகிறீர்களா? முதல்ல இதை  படிங்க..! | Keep in mind the following factors before opting for credit card  EMIs - Tamil Goodreturns

இதை உண்மை என்று நம்பிய அந்தோனி தனது கிரெடிட் கார்டு எண் மற்றும் ரகசிய ஓ.டி.பி எண் விபரங்களை அவரிடம் கூறினார். 2 நாட்கள் கழித்து அந்தோனி தனது மோட்டார் சைக்கிளுக்கு கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போட சென்றார். அப்போது கிரெடிட் கார்டின் தொகை வரம்பு முடிந்துவிட்டது என்று குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஏற்கனவே அந்தோனியின் வங்கிக் கணக்கில் 3 தவணைகளாக ரூ. 81 ஆயிரத்து 760 எடுக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம பெண் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருகம்பாக்கம், நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் துவாரகேஷ் சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் தினந்தோறும் மாலையில் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது.

இதை உண்மை என்று நம்பிய அவர் அதில் இருந்த “கூகுள் பே” எண்ணிற்கு ரூ.30 ஆயிரம் பணம் அனுப்பி முதலீடு செய்தார். சிறிது நேரத்தில் மேலும் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்புமாறு மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது. இதனால் சந்தேகமடைந்த துவாரகேஷ் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் என்பது தெரிந்து சுதாரித்துக்கொண்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Post

#RainAlert : அடுத்த 3 மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Posted by - October 14, 2024 0
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு…

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை.. அதிமுக பொதுச் செயலாளர்கள் லிஸ்ட்..!

Posted by - March 28, 2023 0
அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இதுவரை பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்ந்தது யார் யார் என்று தற்போது பார்க்கலாம்.…

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு

Posted by - August 21, 2023 0
போரூர்: தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை…

“இங்கு பாம்புதான் அரசியல்… ஆனால் நான் பயப்படமாட்டேன்..” – தவெக மாநாட்டில் விஜய் சொன்ன காரணம்!

Posted by - October 28, 2024 0
அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட். “இங்கு பாம்பு தான் அரசியல் என்றும் அதை…

ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!

Posted by - April 9, 2025 0
நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *