“இந்தியா செய்யுறத பார்த்தாலே எரிச்சலாகுது” – ஒட்டுமொத்தமாக கடுப்பில் குதித்த அமெரிக்கா

111 0

இந்தியாவின் செயல்பாட்டால் அவர்களுடனான உறவில் எரிச்சல் ஏற்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

USA On INDIA: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

”எரிச்சலூட்டும் இந்தியா”

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதோடு, ரஷ்யாவிடம் இருந்து ராணுவ ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை வாங்குவதற்காக கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் தான், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, “ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருளை வாங்குவது அமெரிக்கா உடனான உறவில் ஒரு எரிச்சலான புள்ளியாக இருப்பதாக”பேசியுள்ளார்.

ட்ரம்ப் வருத்தமா?

மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் இந்தியா எரிபொருளை வாங்குவது ட்ரம்பை வருத்தமடைய செய்துள்ளதா? என்ற கேள்விக்கு ”சர்வதேச வர்த்தகத்தில் இந்திய ஒரு நட்பு நாடு. எங்களின் கூட்டாளியும் கூட. அதேநேரம் வெளியுறவுக் கொள்கையில் எல்லா விஷயங்களிலும் அனைத்து நேரத்திலும் இருநாடுகளும் 100 சதவிகிதம் ஒத்துப்போவதில்லை” என மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார்.

”ரஷ்யாவிற்கு உதவும் இந்தியா”

தொடர்ந்து பேசுகையில், “இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன, அதில் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு மற்றும் ஒவ்வொரு நாட்டையும் போலவே அதன் பொருளாதாரத்தை ஆற்றுவதற்குத் தேவையான பொருட்களை வாங்கும் திறன் அடங்கும். அதன்படி, ரஷ்யாவிடமிருந்து இருந்து வாங்குகிறது. உலக நாடுகளால் விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகள் காரணமாக, மலிவு விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் இண்ட நடவடிக்கை துரதிர்ஷ்டவசமாக, உக்ரைன் உடனான ரஷ்ய போர் முயற்சியைத் தக்கவைக்க உதவுகிறது.  இது இந்தியாவுடனான எங்கள் உறவில் நிச்சயமாக எரிச்சலூட்டும் ஒரு புள்ளியாகும். அதேநேரம்,  எரிச்சலூட்டும் ஒரே புள்ளியும் அல்ல” என்று ரூபியோ தெரிவித்துள்ளார்.

”போரை ஊக்குவிக்கும் இந்தியா”

தொடர்ந்து பேசுகையில், “அதிபர் ட்ரம்ப் வெளிப்படுத்துவது மிகவும் தெளிவான விரக்தியாகும். சந்தையில் பல எண்ணெய் விற்பனையாளர்கள் இருந்தாலுமே, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்கிறது. இது ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு நிதியளிக்க உதவுகிறது மற்றும் உக்ரைனில் இந்தப் போர் தொடர அனுமதிக்கிறது” என்று ரூபியோ குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் வர்த்தக நண்பன் அமெரிக்கா:

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது. 2024-25 நிதியாணிடில் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக்ம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இந்த வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இருநாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.  அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி மொபைல் போன்கள், மருந்துகள், ஜவுளி மற்றும் ரத்தினக் கற்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கி 87 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளன. இந்நிலையில் இந்திய பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிக்கும் ட்ரம்பின் முடிவு, உள்நாட்டு ஏற்றுமதி திறனை கடுமையாக பாதிக்கும் என கருதப்படுகிறது.

Related Post

மங்கோலியாவில் தீவிரமாக பரவி வரும் பிளேக் நோய்

Posted by - June 28, 2023 0
உலன்பேட்டர் :  மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் வேகமாக பரவி வருகிறது. இது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆகும். இதற்கு தகுந்த சிகிச்சை…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

தலைக்கு தில்ல பாத்தியா.! ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 10 நிபந்தனைகள் விதித்த ஈரான்; அது என்ன.?

Posted by - April 7, 2026 0
அமெரிக்கா-ஈரான் போரை நிறுத்துவதற்கு பாகிஸ்தான் அனுப்பிய வரைவு திட்டத்தை நிராகரித்த ஈரான், ட்ரம்ப்பின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல், பதிலுக்கு 10 நிபந்தனைகள் விதித்துள்ளது. அவை என்ன.? பார்க்கலாம். ஈரான்,…
qq

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது!

Posted by - March 4, 2026 0
ஈரான் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததற்கான தகவல்கள் இல்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் கூறியிருக்கிறது. ஈரானால் இஸ்ரேலுக்குத்தான் அச்சுறுத்தலே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல என்று…
tower

“ஆட்டம்” காண துவங்கிய “ஆயிரம்” வருட கோபுரம்

Posted by - December 2, 2023 0
வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *