இந்த 8 அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி! என்னன்னு தெரியுமா?

352 0

 பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மகிழ்ச்சி நிறைந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. பலரும் படங்களில் காட்டுவது போல கர்ப்பம் தரித்தால் வாந்தி வரும், மயக்கம் வரும் அதுதான் கர்ப்பத்தின் அறிகுறி என்பதெல்லாம் தாண்டி கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப கட்டத்திலேயே சில அறிகுறிகள் தென்பட துவங்கிவிடும்.

  • #Lifestyle
  • #Pregnancy Parenting Tips
  • #Early #Symptoms Of #Pregnancy In Tamil
இந்த 8 அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி! என்னன்னு தெரியுமா?
பெண்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் நாள் என்றால் அது கருத்தரித்தலை உறுதி செய்யும் நாள் தான். கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யகூடிய நாள் தான். முதலிலேயே அறிந்து கொண்டுவிட வேண்டும் என்று தான் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மாதவிடாய் தள்ளிபோனால் தான் அது கருத்தரிப்பை உறுதி செய்யும் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உடல் இன்னொரு உயிரை சுமக்க தயாராகிவிட்டாலே அதற்கான அறிகுறிகளை வெளிகாண்பிக்க தொடங்கிவிடும். சற்று கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளலாம். மருத்துவரிடம் சென்றால் உரிய பரிசோதனை செய்து உறுதி செய்துவிடலாம் என்றாலும் கூட முன்கூட்டியே நீங்களே அறிந்துகொள்ளலாம். அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாமா?
முதலில் உங்கள் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மாதவிடாய் சுழற்சி நாள்களில் மாற்றம் இல்லை என்றால் மாதவிடாய்க்கு பின்பு 14 முதல் 17 நாட்கள் வரை சினை முட்டை வெளியாகும் நாள். இந்நாளில் உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கருத்தரித்தால் கர்ப்பப்பையின் உள்புறத்தில் நஞ்சுக்கொடி ஹெ.சி.ஜீ என்னும் கர்ப்பகால சுரப்பி சுரக்க தொடங்கும். இந்த சுரப்பிதான் இரத்தத்திலும், சிறுநீரிலும் வெளிப்படும். இதை கொண்டு தான் கருத்தரித்தலை உறுதி செய்கிறோம்.

மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த சுழற்சி வராமல் அதை தொடர்ந்து 10 நாட்களுக்குள் அல்லது முந்தைய மாதவிடாய் சுழற்சியிலிருந்து ஏழாம் வாரத்தில் இந்த சுரப்பி அதிகம் சுரக்க தொடங்கும். அப்போது பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்வார்கள் அதனால் தான் மாதவிடாய் காலத்தை சரியாக நினைவில் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

வாசனை திறன்

வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். பொதுவாக உணவு சமைக்கும் போதும், இலேசாக வெளிப்படும் நறுமணமும் கூட அதிகமாக உணர்வீர்கள். சமையலில் பருப்பு வேகவைக்கும் மணம் கூட சற்று கூடுதலாக வெளிப்படும்.

சில வாசனைகள் உங்களுக்கு பிடித்தாலும் சில வாசனைகள் உங்களை குமட்டலுக்கும் உள்ளாக்கும். ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

சிறுநீர் கழிக்கும் உணர்வு

தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறியே. பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும். அதற்கேற்ப சிறுநீரும் அதிகமாக வெளியேறும்.

கர்ப்பக்காலத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் கருத்தருத்தலை உணர்த்தும் அறிகுறிகளில் இந்த அறிகுறியும் ஒன்று என்பதால் உங்கள் மாதவிடாய் காலத்தை இதனுடன் தொடர்பு படுத்தி இந்த அறிகுறியை கவனியுங்கள்.

சோர்வு

எப்போதுதான் சோர்வு இல்லாமல் இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு உடல் பலவீனத்தை கொண்டிருக்கும். ஆனால் வழக்கத்தை விட அதிகமாக சோர்வு ஆட்கொண்டால் அதற்கு காரணம் கருத்தரித்தல் என்று சொல்லலாம்.

உடலில் உண்டாகியிருக்கும் புதிய உயிருக்காக ஹார்மோன்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இந்த சோர்வு வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே இருக்கும். மாதவிடாய் வரக்கூடிய நாள் நெருங்கும் போது இந்த சோர்வு ஆட்கொண்டால் அதிலும் தொடர்ந்து இருந்தால் கருத்தரித்தலுக்கான அறிகுறிதான் என்று சொல்லலாம்.

வெப்பநிலை

வழக்கத்தை விட உடல் வெப்பநிலை சூடாக இருக்கும். உடலில் உண்டாகும் அசெளகரியத்தால் காய்ச்சல் போன்று நினைக்கலாம். அதற்கேற்ப உடல் ஓய்வு கேட்டு கெஞ்சும்.

இரவு முழுவதும் தூங்கி காலையில் ஓய்வு எடுத்தாலும் கூட காலையில் எழுந்ததும் உங்களை மீண்டும் படுக்கையில் கிடக்க சொல்லும். ஆனால் இவையெல்லாமே காய்ச்சலுக்கான அறிகுறி அல்ல. கருத்தரித்தலுக்கான அறிகுறி தான் என்பதை தொடர்ந்து வரும் நாட்களில் உணர்ந்துகொள்வீர்கள்.

குமட்டல்
மார்னிங் சிக்னஸ் என்று சொல்லகூடிய அதிகாலை சோர்வும் குமட்டலும் உண்டாக கூடும். சாப்பிட்டாலும் வயிறு காலியாக இருந்தாலும் இந்த உணர்வு அப்படியே இருக்கும். சிலருக்கு வாசனையிலும் ஒவ்வாமையை உண்டாக்கி குமட்டல் உணர்வை உண்டாக்கும்.

காலை முதல் படுக்கையில் விழுவது வரை நாள் ஒன்றுக்கு கருத்தரித்த ஆரம்ப நாளிலேயே 5 முறையாவது இந்த உணர்வு அதிகரிக்கும். பொதுவான இந்த அறிகுறி அனைவருக்குமே உண்டாவதால் எல்லோருக்குமே இது கருத்தரித்தல் உறுதிக்கான அறிகுறி என்பது தெரியும்.

​பசியும் பசியின்மையும்

நாள் முழுவதும் பசி உணர்வு மிகுந்திருக்கும். அதே நேரம் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர பிற உணவுகள் மீதும் மோகம் அதிகரிக்கும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.

இப்படி உணவின் பிடிப்பிலும் ஒரு மாற்றம் உண்டாகும். அதே நேரம் எப்படி சமைத்தாலும் சாப்பிட முடியாது. இந்த அறிகுறிகள் எல்லாமே நீங்கள் கருத்தரித்தலுக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்பதையே உணர்த்தும்.

​வயிற்றில் அசெளரியம்

வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர்வீர்கள். இது உங்கள் அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். ஏனெனில் கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர்வீர்கள்.

இந்த அறிகுறிகள் கருத்தரித்த அனைவருக்கும் உண்டு. ஆனால் வெகு விரைவிலேயே இந்த அறிகுறிகளை மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான். கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும்.

அதை உணர்த்தும் அறிகுறிகளை தான் இங்கு கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த அறிகுறிகள் தீவிரமாகும் வரை பலரும் இந்த அறிகுறிகளை கவனிப்பதில்லை. அதே நேரம் இந்த அறிகுறிகளை அறிந்ததும் நீங்களாக முடிவெடுக்கவும் செய்யாமல் மருத்துவரை அணுகி கருவின் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து பரிசோதனை செய்வதும் மிகவும் முக்கியம்.


Related Post

“Relationship Strong ஆக வேண்டுமா? Couples க்கான Top 7 Practical Love & Life Tips | Tamil Relationship Advice 2025”

Posted by - December 12, 2025 0
Chennai: இன்றைய busy வாழ்க்கையிலே relationship-ல misunderstandings, trust issues, communication gap மாதிரி பிரச்சனைகள் அதிகரிச்சிருக்குது. ஒரு healthy relationship strong ஆகணும்னா love மட்டும்…

மீல் மேக்கரை வெச்சு இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புட்டு செய்யுங்க.. சும்மா அள்ளும்…

Posted by - September 15, 2023 0
உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா…

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பத்த வைத்த சுனிதா.. முகம் கருத்து போன ஹவுஸ் மேட்ஸ், இன்றைய எபிசோட்

Posted by - January 7, 2025 0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரப் போகிறார்கள். இதன் அறிவிப்பு நேற்றே வந்தது. அதன் முதல் கட்டமாக இப்போது சுனிதா…

விஜய் டிவி புகழ் செல்போனை திருடி கொண்டு ஓடிய நபர்.. ‘ஐபோன் கூட வாங்கி தரேன்’!

Posted by - April 5, 2023 0
புகழ் விஜய் டிவியில் காமெடியனாக கலக்கி தற்போது சினிமாவிலும் நுழைந்து இருக்கிறார் புகழ். குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற ஷோக்களில் ரசிகர்களை காமெடியால் ஈர்த்த…

திருமண தடை நீக்கும் கருங்காலி மாலை

Posted by - January 25, 2023 0
செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் இந்த மாலையை அணியலாம். அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும். ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றி பாளையம் பைரவர் பீடம் விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *