இன்று மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் சிறை தண்டனை

240 0

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தமிழ்நாட்டில் இன்றுடன் பரப்புரை நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

பரப்புரை நிறைவைத் தொடர்ந்து வாக்குப்பதிவு முடியும் வரை அமலில் வரும் கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு வரையிலான கட்டுப்பாடுகள்

அதில், இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடர்பு இல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், வாக்காளர்கள் அல்லாதோர், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்கள் என கண்டறியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டதையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி வாயிலாகவும் பரப்புரை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

பொதுமக்களை ஈர்க்கும் வகையில் எந்தவொரு இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் கூடாது என்றும், தேர்தல் பரப்புரைக்கான நேரம் முடிந்த பின், பரப்புரை மேற்கொண்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபாரதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணிக்கு பின் செயல்திறனற்றதாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாகன அனுமதியும்… கட்டுப்பாடும்…

வாக்குப்பதிவு நாளில், சில கட்டுப்பாடுகளுடன் ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாகன அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி மக்களவைத் தொகுதி முழுவதும் சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கும் ஒரு வாகனத்திற்கு அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.2 நபர்களை மட்டுமே கொண்ட, தற்காலிக பிரசார அலுவலகத்தை வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுளளது. தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

செய்தியாளரிடம் கூகுள் பண்ணச் சொன்ன பும்ரா- பதில் அளித்த சுந்தர் பிச்சை

Posted by - December 20, 2024 0
மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

கருவாடு கடை…மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - January 6, 2025 0
முதலில் கருவாடு கடை ஏன் என்றால், மீன் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவாக கருதப்படுகிறது, அதிலும் எந்த வித கெமிக்கல்களும், எந்த வித பக்க விளைவுகளும்…

பைக்கில் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை- போலீசார் பாராட்டு

Posted by - July 6, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது…

ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் – தவெகவின் தரமான சம்பவம்

Posted by - March 5, 2025 0
பல லட்சம் கோடி கடனுக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மூலம் புதிய எம்.பிக்கள் அவசியமா? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார் மாநில அரசுகளுக்கு உரிய…

மற்ற இன்டர்நெட் சேவைகளை பின்னுக்கு தள்ளப்போகும் ஜியோ ஏர் ஃபைபர்… சிறப்பம்சங்கள் என்ன?

Posted by - August 28, 2023 0
எண்ணற்ற இன்டர்நெட் யூசர்கள் ஜியோ ஃபைருக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். #jio #india #reliance #mukeshambani #reliancejio #ambani #airtel #nitaambani #akashambani #ishaambani #anantambani…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *