பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். – என்ன செய்யப் போகிறது திமுக?

114 0

பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக் கேட்டு ஆர்ஜேடி-யுடன் ஆரம்பத்திலிருந்தே மல்லுக்கு நின்றது காங்கிரஸ். கடைசியில், 61 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், 7 தொகுதிகளில் ஆர்ஜேடி-யுடனேயே நட்புடன்(!) மோதியது காங்கிரஸ். கடைசியில், காங்கிரஸுக்கு கைவசமானது என்னவோ 6 தொகுதிகள் தான். பிஹாரில் மட்டுமல்ல… தமிழகத்திலும் 1996 முதல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் அபாரமான தோல்விகளையே சந்தித்திருக்கிறது.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இதேபோல், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வுக்கு அழுத்தம் கொடுத்து 63 இடங்களை பெற்ற காங்கிரஸ், ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. ஓர் இடத்தில் காப்புத் தொகையையும் காவுகொடுத்தது.

இதேபோல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 41 இடங்களை தந்தது திமுக. அதில் எட்டில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. ஆனால், கடந்த 2021 தேர்தலில் சுதாரித்துக் கொண்டது திமுக. அப்போது காங்கிரஸ் வஞ்சகமின்றி 60 தொகுதிகளைக் கேட்டது. ஆனால், “அதிக தொகுதிகளை கேட்டு வாங்கி தோற்றுப் போய் எதிர்க் கூட்டணியை ஜெயிக்க வைக்கிறீர்கள்” என்று சொல்லி காங்கிரஸுக்கு 25 இடங்களை மட்டுமே தந்தது திமுக. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. ஆக, குறைவான தொகுதிகளைக் கொடுத்தால் நிறைவாக ஜெயிக்கிறது காங்கிரஸ் என்பது கடந்த கால வரலாறாக இருக்கிறது.

இந்நிலையில், இம்முறை வெற்றி வாய்ப்புள்ள 125 தொகுதிகளில் கவனம் செலுத்தும்படி காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான கிரீஷ் சோடங்கரே தமிழக காங்கிரஸாரை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார். இதில், கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் போன்றவர்கள் “அமைச்சரவையிலும் பங்கு கேட்போம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கதர் தலைவர்களின் இத்தகைய விருப்பப் பேச்சுகளை எல்லாம் மறுத்துப் பேசாமல் திமுக-வினர் மவுனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில், பிஹாரின் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதால் தமிழக காங்கிரஸார் எதுவும் பேசமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.

நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி மேலும் உறுதியாகி விட்டதால் இப்போதைக்கு மத்திய அரசில் எந்தக் குழப்பமும் வர வாய்ப்பில்லை. அதனால், மத்தியில் திமுக-வின் தயவு காங்கிரஸுக்கு கட்டாயம் தேவை. அதனால், தமிழகத்தில் திமுக என்ன சொல்கிறதோ அதைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு அந்தக் கட்சி ஆளாகி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.மறுபடியும் 25 தொகுதிகள் தான் தரமுடியும் என திமுக சொன்னால் காங்கிரஸ் கட்சி தட்டாமல் அதை ஏற்றுக் கொண்டு போட்டியிடுமா அல்லது தொண்டர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய மாற்று வழிகளை ஆராயுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post

போலி வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி நடைபெறுகிறது – எல்.முருகன் விளக்கம்!

Posted by - November 19, 2025 0
போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின்…

மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000

Posted by - March 3, 2026 0
முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.…

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Posted by - March 11, 2026 0
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி…

தமிழக சட்டப்பேரவை தேர்தல்-வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

Posted by - April 6, 2026 0
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு…

“பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

Posted by - April 16, 2026 0
மு.க.ஸ்டாலின் ஆட்சி மீது போதைக் கலாச்சாரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுதான் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியது திமுக-வினரை அதிருப்தி அடையவைத்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *