கருணை இருக்கு…நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்…

193 0

பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்காததற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசிடம் கருணை இருக்கு ஆனா நிதி இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு, அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்கியது. அதனுடன் பரிசுப் பணம் வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பொங்கல் பரிசுப் பணம்… எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

2025 பொங்கல் பண்டிகைக்கு, தமிழ்நாடு அரசு சார்பில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் அரசு வாங்கவில்லை எனவும், தங்கள் ஆட்சியில் 2,500 ரூபாய் வழங்கப்பட்டபோது, அதை 5,000 ரூபாயாக வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறியதாகவும், ஆனால், தற்போது 1,000 ரூபாய் கூட வழங்கவில்லை எனவும் அதிமுக குற்றம்சாட்டியது.  பொங்கல் பரிசுப் பணம் வழங்காததற்கு, திமுக கூட்டணி கட்சிகளே சில அதிருப்தி தெரிவித்தன.

பொங்கல் பரிசுப் பணம்… நிதி அமைச்சர் விளக்கம்

இவ்வாறு, பொங்கல் பரிசுப் பணம் வழங்காததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசிடம் பொங்கல் பரிசுப் பணம் வழங்க போதிய நிதி இல்லை என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். குறிப்பாக இந்த ஆண்டு, நிதி நெருக்கடி உள்ளதாலேயே, பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் வழங்க முடியவில்லை என அவர் கூறிய அவர், மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிதியை சரிவர வழங்காததால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பேரிட நிவாரண நிதி, கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உள்ளிட்டவற்றை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவதாகவும், அதனால் தமிழ்நாடு அரசிடம், பொங்கலுக்கு ரொக்கம் வழங்கும் அளவிற்கு நிதி இல்லை என்றும், அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.

கருணை இருக்கு… ஆனா நிதி இல்லை – ஸ்டாலின்

இந்த நிலையில், இன்று(11.01.2025) சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொங்கல் ரொக்கப் பரிசு வழங்காதது குறித்து விளக்கமளித்தார். அப்போது, அரசிடம் கருணை இருக்கிறது, ஆனால் நிதி இல்லை என தெரிவித்தார். அரசின் வருவாய் அதிகரித்துள்ள போதிலும், திமுக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதால், மற்ற செலவுகளுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் பல திட்டங்களுக்கு அதிகமான பங்கு நிதியை தமிழ்நாடு அரசே வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.

Related Post

பொங்கல் பரிசு ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் – விஜயகாந்த் கோரிக்கை

Posted by - December 26, 2022 0
பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது – அமைச்சர் எ.வ.வேலு 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி…

தவெக – பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்

Posted by - April 21, 2025 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக, இந்த முறை தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும்…

டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

Posted by - October 31, 2023 0
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த…

தமிழக அரசு பஸ்கள் இயங்கவில்லை- பயணிகள் அவதி

Posted by - January 9, 2024 0
புதுச்சேரி: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில்…

நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

Posted by - April 5, 2023 0
நிலக்கரி சுரங்க அறிவிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *