கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் – கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்

230 0

வங்கிகள் விநியோகம் செய்யம் கிரெடிட் கார்ட்களின் பின்னணியில் உள்ள பலரும் அறியாதா, வியாபார திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

வங்கிகளின் லாபத்தின் ஆதாரமாக கிரெடிட் கார்ட்கள் உள்ளன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

கிரெடிட் கார்ட்:

இந்தியாவில் மக்கள் தங்கள் பெயர்களில் கிரெடிட் கார்ட்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் கிரெடிட் கார்ட்கள் மூலம் கடன் வாங்கி அத்தியாவசிய தேவைகள் உட்பட பலவற்றிற்காக செலவு செய்கின்றனர். எப்போதாவது ஏன் வங்கிகள் தாமாக முன்வந்து கிரெடிட் கார்டை வழங்குகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுந்துள்ளதா? உண்மையில், கிரெடிட் கார்டு வங்கிக்கு ஒரு பெரிய வருமான ஆதாரமாகும். இது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மேலும் மேலும் செலவு செய்ய ஊக்குவிக்கிறது.

கூவி கூவி விற்பனை:

கிரெடிட் கார்ட் என்பது ஒரு காலத்தில் அதிக வருமானம் கொண்டவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என கருதப்பட்டது. ஆனால், இன்று பெரும்பாலான நடுத்தர மக்கள் கைவசம் கிரெடிட் கார்ட்கள் உள்ளன. காரணம் வங்கிகள் அதற்கான விதிகளை கடுமையாக தளர்த்தி, பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தீவிரம் காட்டுகின்றன. செல்போன் மூலம் மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டு, கிரெடிட் கார்ட்டை பயன்படுத்துமாறு தூண்டிவிடுகின்றன. பொதுஇடங்களில் கூட பல வங்கிகள் சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு, கிரெடிட் கார்ட்கள் விநியோகிக்கப்படுகின்றன. கிரெடிட் கார்ட்கள் மூலம் கனவுகள் நிறைவேறுவதாகவும், அது ஒரு அத்தியாவசிய பொருள் என்பது போலும் முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன. வாழ்நாள் முழுவதும் இலவசம் என ஆசை வார்த்தைகளை கூறியும், பல வங்கிகள் கிரெடிட் கார்ட்களை பொதுமக்கள் தலையில் கட்டுகின்றன.

கிரெடிட் ஸ்கோர் முக்கியம்பா..!

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது, ​​கடன் பயன்பாட்டு விகிதத்தை நீங்கள் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். அதாவது, உங்கள் கிரெடிட் கார்டு வரம்பில் ஒரு மாதத்தில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள். இது கிரெடிட் ஸ்கோரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் பெற, குறைந்த கடன் பயன்பாட்டு விகிதத்தைக் கொண்டிருப்பது அல்லது 30 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பது நல்லது.

வங்கிகளின் லாப ஆதாரம்:

வங்கிகள் கிரெடிட் கார்டுகளில் பெரிய அளவில் பந்தயம் கட்டி, அதை உங்களுக்கு மேலும் மேலும் வழங்குகின்றன. ஏனென்றால் வங்கிகள் வட்டி விகிதங்கள், வருடாந்திர கட்டணங்கள், மறு வெளியீட்டு கட்டணங்கள், வணிகர் கட்டணங்கள் போன்ற வடிவங்களில் கிரெடிட் கார்டுகளிலிருந்து லாபம் ஈட்டுகின்றன. இது தவிர, கிரெடிட் கார்டு பில் சரியான நேரத்தில் செலுத்தப்படாவிட்டால், நிலுவைத் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும். சில நேரங்களில் தாமதமாக செலுத்தும் கட்டணங்களும் வட்டியுடன் சேர்க்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் பரிமாற்றக் கட்டணங்கள் வடிவில் வங்கி லாபம் ஈட்டுகிறது. இந்தியாவில் கிரெடிட் கார்டு வணிகம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஜனவரி 2025 இல் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு 10.8 சதவீதம் அதிகரித்து ரூ.1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கிரெடிட் கார்டில் வங்கி சலுகைகள்

வங்கிகள் வாடிக்கையாளர்களை வெகுமதி திட்டங்கள், கேஷ்பேக், விமான பயணத்தில் தள்ளுபடிகள், இலவச லவுஞ்ச் அணுகல் போன்ற பல்வேறு சலுகைகள் மூலம் ஈர்க்கின்றன. எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, பல நேரங்களில் மக்கள் கிரெடிட் வரலாற்றை உருவாக்க அல்லது தங்கள் கிரெடிட் ஸ்கோர் நிர்வகிக்க கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

Related Post

எம்.எல்.ஏ. பாலியல் தொல்லையால் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி- கடிதத்தில் பரபரப்பு புகார்

Posted by - June 30, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை…

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Posted by - December 21, 2022 0
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…

போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

Posted by - July 31, 2024 0
Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம்…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

பிரமாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய “எலி வளை” தொழிலாளர்கள்

Posted by - November 29, 2023 0
உத்தர்காசி: நிலக்கரி சுரங்கங்கள் போன்றவற்றில் சட்டவிரோதமாக சிறிய சுரங்கங்கள் அமைத்து, அவற்றின் மூலம் நிலக்கரி திருடுவது சிலரின் வழக்கம். சில அடிகள் முதல் பல அடிகள் வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *