சட்டப்பேரவையின் கதவுகள் மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: காரணம் என்ன தெரியுமா?

263 0

சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன்  உறுப்பினர் எவரேனும் மொழியலாம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு, பேரவை விதிகளில் ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்தி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் சாசனப் பதவிகளான குடியரசுத் தலைவர், ஆளுநர் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிப்பது தொடர்பாக சில விதிகள் உள்ளன. அதன்படி, விதி எண் 92ன் ஏழாவது பிரிவில், உறுப்பினர் ஒருவர் பேசுகையில், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசக் கூடாது. இந்த நிலையில், பேரவையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை கொண்டு வர பேரவை விதிகள் 92 மற்றும் 287-ல் ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்து, பேரவை முன்னவரான துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்த பேரவையின் கதவுகள் மூடப்பட்டன. அப்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியே செல்ல முற்பட்ட நிலையில் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜகவைச் சேர்ந்த காந்தி, சரஸ்வதி ஆகியோர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன் உறுப்பினர் எவரேனும் முன்மொழியலாம். கூட்டத்திற்கு வந்திருந்து வாக்களிக்கும் (3/4 of the total number of members present and voting at the meeting) மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பகுதியினரின் ஆதரவுடன் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.

Related Post

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக ஏமாற்றி இளைஞர்கள்-இளம்பெண்களிடம் பணமோசடியில் ஈடுபடும் கும்பல்

Posted by - November 23, 2023 0
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி…

இன்று வெயில் அதிகரிக்கும்… மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

Posted by - May 15, 2023 0
தமிழ்நாடு, புதுச்சேரியில் படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று…

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் 580-வது நாளாக மாற்றமில்லை

Posted by - December 22, 2023 0
கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில் இந்தியா பண மதிப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.…

“நைட்டி”.. மனித நுரையீரலை மசாலா தடவி சாப்பிட்டாராம்.. கல்லீரலை கூட விடல.. வெறிபிடித்த “ஹோமோ” டாக்டர்

Posted by - November 25, 2023 0
தஞ்சாவூர்: கும்பகோணம் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி செய்த காரியத்தை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் தஞ்சை போலீசார். அவரது வீட்டில் தோண்ட தோண்ட எலும்புகள் கிடைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *