பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

259 0

பூரி – கிழங்கு நம்மில் பலருக்கும் பிடித்த காலை உணவில் ஒன்று. எண்ணெய் உணவாக இருந்தாலும் இவற்றை நாம் சப்புக்கொட்டி சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. ஏனென்றால், அதன் சுவை அப்படி…

அப்படி அனைவருக்கும் பிடித்த பூரியை எப்பவும் போல செய்யாமல் அதன் சுவையை அதிகரித்து சற்று வித்தியாசமாக செய்ய எப்போதாவது நீங்க யோசித்தது உண்டா?.பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

குஜராத்தி ஸ்டைலில் இஞ்சி, மிளகாய், ஓமம் என மசாலா பொருட்கள் சேர்த்து சற்று வித்தியாசமான சுவையில் பூரி சுடுவது எப்படி என நாங்கள் கூறுகிறோம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்.

ரவை – 1/2 கப்.

கடலை மாவு – 1/2 கப்.

இஞ்சி, பச்சை மிளகாய் விழுது – 1 ஸ்பூன்.

சீரகப்பொடி – 1/2 ஸ்பூன்.

தனியா பொடி – 1/2 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

கரம் மசாலா – 1/2 ஸ்பூன்.

மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்.

சீரகம் – 1/2 ஸ்பூன்.

ஓமம் – 1/2 ஸ்பூன்.

கஸ்தூரி மேத்தி – 1/2 ஸ்பூன்.

கொத்தமல்லி தழை – ஒரு கொத்து

செய்முறை :

முதலில், பூரி செய்ய எடுத்துக்கொண்ட கோதுமை மாவு, கடலை மாவு ஆகியவற்றை ஒரு சல்லடையில் சலித்து தூசி நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும். இப்போது, எடுத்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பச்சை மிளகாவை ஒரு மிக்சி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இதை தொடர்ந்து, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடேற்றுங்கள். இதில், அரை கப் ரவை சேர்த்து, பொன்னிறமாக வறுத்து தனியே ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

தற்போது இந்த பாத்திரத்தில், சலித்து வைத்த மாவு, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, சீரகப்பொடி, தனியாப்பொடி, கரம் மசாலா, சீரகம், ஓமம், கஸ்தூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.

தொடர்ந்து இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு மாவினை பிசைந்து 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.

பூரி சுட்டு எடுக்க கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில் இதில் பூரி மாவினை தட்டையாக உருட்டி போட்டு, சுட்டு எடுக்க மசாலா பூரி தயார்.

மசாலா பொருட்கள் சேர்த்து தயார் செய்த இந்த பூரியினை நாம் அப்படியே சாப்பிடலாம். விருப்பம் உள்ளவர்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சட்னி, கிழங்கு மற்றும் சாம்பார் சேர்த்து இந்த பூரியை பரிமாறலாம்.

Related Post

ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தொல்லைகள்

Posted by - January 25, 2023 0
அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன்…

இன்றைய ராசி பலன்(4.3.2023)❤️

Posted by - March 4, 2023 0
இன்றைய ராசி பலன்(4.3.2023)❤️ மேஷம்✅ உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிரிகள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். தன்னம்பிக்கை மிக்கவரான நீங்கள் எந்தச் செயலையும் தவிர்க்காமல் திறம்படச் செய்வீர்கள். மனதில்…

சன் டிவியில் விரைவில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. நடிகர்கள் யார்?

Posted by - March 4, 2025 0
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் சன் டிவி தான். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் என நிறைய தொடர்கள் வெற்றிகரமாக…

ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

Posted by - March 12, 2024 0
நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.…

TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்

Posted by - August 9, 2023 0
சன் டிவி சன் தொலைக்காட்சியில் கயல், வானத்தை போல, சுந்தரி, எதிர்நீச்சல், இனியா என தரமான பெண்களை மையப்படுத்திய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *