சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு.. பிரதமர் மோடி அறிவிப்பு

185 0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் லட்சக்கணக்கான பெண்களின் நிதிச்சுமையை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் சமையல் எரிவாயுவை மிகவும் குறைந்த விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு எளிதான வாழ்வியல் சூழல் என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.சென்னையில் தற்போது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் விலை குறைப்பு அறிவிப்பை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படும்.

Related Post

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - February 23, 2023 0
டெல்லி: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற…

30 மணி நேரம் தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானம்- 2 பேரின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது

Posted by - August 2, 2023 0
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு…

ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் மாயம் என பேச்சு- பவன் கல்யாணுக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Posted by - July 11, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஏலூரில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:- ஆந்திராவில் கடந்த 4…

அரசு ஆதரவு பெற்ற கடனே இல்லாத பென்னி பங்கு.. ஒரே வாரத்தில் 50% லாபம்!

Posted by - August 26, 2024 0
கடனே இல்லாத மைக்ரோ கேப் பங்கு கடந்த ஒரே வாரத்தில் 50% லாபத்தை கொடுத்துள்ளன. மேலும் இது அரசு ஆதரவு பெற்ற கடனே இல்லாத பென்னி பங்கு…

திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன்: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலம்

Posted by - July 6, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயல்வெளியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *