சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு.. பிரதமர் மோடி அறிவிப்பு

197 0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் லட்சக்கணக்கான பெண்களின் நிதிச்சுமையை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் சமையல் எரிவாயுவை மிகவும் குறைந்த விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு எளிதான வாழ்வியல் சூழல் என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.சென்னையில் தற்போது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் விலை குறைப்பு அறிவிப்பை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படும்.

Related Post

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Posted by - August 21, 2023 0
புதுடெல்லி: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின்…

மற்றவர்களை விட நீங்கள் குளிரை அதிகமா உணர்கிறீர்களா..? ‘இந்த’ வைட்டமின் குறைபாடு இருக்கலாம்!

Posted by - December 16, 2024 0
உங்களைச் சுற்றியுள்ளவர்களை விட நீங்கள் குளிரால் நடுங்கினால், உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததே காரணம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

அதள பாதாளத்தில் பங்குச் சந்தை.. மாஸ் காட்டிய ஐடி பங்குகள்!

Posted by - August 3, 2024 0
மிகவும் மோசமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் இன்று பங்குச் சந்தை பெரிய சரிவை செய்துள்ளது. நாளின் முடிவில் சென்செக்ஸ்-நிஃப்டி ஒவ்வொன்றும் 1%க்கும் அதிகமாக சரிந்தன. ஐடி மற்றும்…

தங்கப் புதையலை சென்னையில் விற்று உல்லாசமாக வாழ்ந்த 3 பேர் கைது- 499 தங்க நாணயங்கள், ரூ.14 லட்சம் பறிமுதல்

Posted by - August 28, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சித்தே பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித், அமரன், வருண் இவர்கள் கடந்த மே மாதம் அதே கிராமத்தில் உள்ள மலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *