ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

244 0

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது.

அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரெயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்- பாலசா பயணிகள் ரெயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.6 பேர் பலி.. ஏராளமானவர்கள் படுகாயம்.. ஆந்திரா ரயில் விபத்துக்கான ஹெல்ப்  லைன் எண்கள் அறிவிப்பு | Andhra Pradesh train accident Helpline numbers  details here - Tamil Oneindia
அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய், லோசான காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணி துரிதமான நடைபெற்று வருகிறது.

Related Post

கொரோனாவால் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

Posted by - April 26, 2023 0
சிம்லா : கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன. இந்த…

நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு.

Posted by - March 7, 2026 0
TRP Freeze: தொலைக்காட்சி சேனல்களுக்கான ரேட்டிங்கை நிறுத்தி வைத்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது TRP Freeze: ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சில…

மதுபோதையில் ஓட்டலில் இளம்பெண்களுடன் மாப்பிள்ளை நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

Posted by - April 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 28).…

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் செய்த மோசடி: ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டின் நிலைமை என்ன?

Posted by - November 16, 2023 0
மும்பை: சஹாரா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுப்ரதாராய் நேற்று முன்தினம் காலமானார். 1978-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் முதலீட்டில் சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை தொடங்கிய சுப்ரதா…

வந்தது ஆதார் அப்டேட் – எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் – இனி கட்டாயமும், கட்டணமும்

Posted by - November 1, 2025 0
Aadhaar Updates: ஆதார் கார்ட் அப்டேட் அல்லது மாற்றங்களை செய்ய இன்று (நவ.1) முதல் நாடு முழுவதும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. Aadhaar Updates: ஆதார் கார்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *