health

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி சாப்பிடலாம்.. என்ன பாருங்க

277 0

சென்னை:

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள், பழங்கள், பருப்புகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்? ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடியது பருப்பு வகைகளாகும்.. காரணம், பருப்புகளில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவு என்பதுடன், நார்ச்சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன. இவைகள் இரண்டுமே ரத்த சர்க்கரை அளவை அதிகமாக பாதிக்காது…

விதைகள்:

இவைகளுடன் விதைகள், கீரைகளை உணவில் சேர்த்து கொள்ளும்போது, வைட்டமின்கள், கொழுப்புகள், புரதங்கள், இரும்புச்சத்துக்கள் என அனைத்துமே சேர்ந்தும் கிடைத்துவிடுகிறது.சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி  சாப்பிடலாம்.. என்ன பாருங்க | Do you know the Health Benefits of Orange  Fruit and what are the ...

வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு என கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைவிட, பீன்ஸ், கோஸ், அருகம்புல் போன்ற நிறைய நார்ச்சத்தும், தாதுக்களும் உள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பாகற்காய் போன்றவற்றையும், முட்டை, பால் பொருட்கள், சிக்கன், மீன் என புரோட்டீன் நிறைந்த உணவுகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

பழங்கள்:

பழங்களை பொறுத்தவரை, அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. குறிப்பாக, ஒரு பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு 70 முதல் 100 வரை இருந்தால், அந்த பழங்களில் நிறைய சர்க்கரை அளவு உள்ளது என்று பொருள். இது காய்கறிகளுக்கும் பொருந்தும்.. எனவே, கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை தவிர்த்துவிடலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு, நெல்லிக்காயைவிட சிறந்த பழம் வேறில்லை.. வைட்டமின் C, நார்சத்துக்கள் அதிகம் உள்ள பழம் இதுவாகும்.. இதற்கு அடுத்தபடியாக, அதிக சத்துள்ள கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். அதேபோலஆரஞ்சு, திராட்சை பழங்கள், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கக்கூடியது.. பப்பாளியில் சர்க்கரையின் அளவு என்பதால் தாராளமாக சாப்பிடலாம்..

மாதுளம்பழங்கள், ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. ஆப்பிள் பழங்கள், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. தர்பூசணிகள், உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகின்றன. தவிர்க்க வேண்டியது: உலர்ந்த பிளம்ஸ், அன்னாசிப்பழம், பழுத்த வாழைப்பழங்கள், ஆரஞ்சு, உலர்ந்த திராட்சை, திராட்சை மற்றும் பேரீச்சம்பழம், மாம்பழம், போன்ற இனிப்பு பழங்களை தவிர்க்கலாம். மா, பலா, வாழை என்ற முக்கனிகளை தவிர்க்கலாம்.

ஆனால், கிவி பழத்தை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இந்த பழத்தில் வைட்டமின் A, C, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். சர்க்கரையின் அளவை குறைக்க, பெர்ரீ பழங்கள் அபரிமிதமாகவே உதவுவதால், இதை தைரியமாகவே சாப்பிடலாம்.

பொட்டாசியம்:

அதேபோல, ஆரஞ்சு பழம், கிட்டத்தட்ட ஒரு மருந்துபோலவே, சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படுகிறது. நார்ச்சத்து, வைட்டமின் C, ஃபோலேட், பொட்டாசியம் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயிலிருந்து விடுபட பெரிதும் துணைபுரிவது, இந்த ஒரு பழமாகத்தான் இருக்க முடியும்.

அவகடோ பழங்களை பொறுத்தவரை, ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவையாகும்.. ஏகப்பட்ட வைட்டமின்களும், தாதுக்களும் இந்த பழத்தில் உள்ளதுடன், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், நீரிழிவு அபாயத்தை இந்த அவகேடோ பழங்கள் குறைப்பதாக சொல்கிறார்கள்.

Related Post

பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி- உதயநிதி பதிவு …

Posted by - November 30, 2022 0
பிறந்த நாள் அன்று என்னை வாழ்த்திய, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியினர், மாற்றுத்திறனாளி தோழர்கள், திருநங்கை-திருநம்பிகள், கலைத்துறையினர், சமூக வலைதள தன்னார்வலர்கள், பத்திரிகை மீடியாவினர்…

ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை – நடிகர் அஜித் உருக்கம்!

Posted by - January 14, 2025 0
“எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை. இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது”…

கடந்த நிதியாண்டில் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சென்னை துறைமுகம் சாதனை

Posted by - August 17, 2023 0
சென்னை: கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்து உள்ளார். சுதந்திர தின விழாவை…

ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிஇஓ ராஜினாமா

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர்…

“சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது” – துணை முதலமைச்சர் #UdayanidhiStalin கண்டனம்!

Posted by - October 19, 2024 0
வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், அதன் பொன்விழா ஆண்டு நேற்று மாலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *