சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி சாப்பிடலாம்.. என்ன பாருங்க

260 0

சென்னை:

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள், பழங்கள், பருப்புகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்? ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடியது பருப்பு வகைகளாகும்.. காரணம், பருப்புகளில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவு என்பதுடன், நார்ச்சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன. இவைகள் இரண்டுமே ரத்த சர்க்கரை அளவை அதிகமாக பாதிக்காது…

விதைகள்:

இவைகளுடன் விதைகள், கீரைகளை உணவில் சேர்த்து கொள்ளும்போது, வைட்டமின்கள், கொழுப்புகள், புரதங்கள், இரும்புச்சத்துக்கள் என அனைத்துமே சேர்ந்தும் கிடைத்துவிடுகிறது.சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி  சாப்பிடலாம்.. என்ன பாருங்க | Do you know the Health Benefits of Orange  Fruit and what are the ...

வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு என கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைவிட, பீன்ஸ், கோஸ், அருகம்புல் போன்ற நிறைய நார்ச்சத்தும், தாதுக்களும் உள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பாகற்காய் போன்றவற்றையும், முட்டை, பால் பொருட்கள், சிக்கன், மீன் என புரோட்டீன் நிறைந்த உணவுகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

பழங்கள்:

பழங்களை பொறுத்தவரை, அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. குறிப்பாக, ஒரு பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு 70 முதல் 100 வரை இருந்தால், அந்த பழங்களில் நிறைய சர்க்கரை அளவு உள்ளது என்று பொருள். இது காய்கறிகளுக்கும் பொருந்தும்.. எனவே, கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை தவிர்த்துவிடலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு, நெல்லிக்காயைவிட சிறந்த பழம் வேறில்லை.. வைட்டமின் C, நார்சத்துக்கள் அதிகம் உள்ள பழம் இதுவாகும்.. இதற்கு அடுத்தபடியாக, அதிக சத்துள்ள கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். அதேபோலஆரஞ்சு, திராட்சை பழங்கள், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கக்கூடியது.. பப்பாளியில் சர்க்கரையின் அளவு என்பதால் தாராளமாக சாப்பிடலாம்..

மாதுளம்பழங்கள், ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. ஆப்பிள் பழங்கள், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. தர்பூசணிகள், உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகின்றன. தவிர்க்க வேண்டியது: உலர்ந்த பிளம்ஸ், அன்னாசிப்பழம், பழுத்த வாழைப்பழங்கள், ஆரஞ்சு, உலர்ந்த திராட்சை, திராட்சை மற்றும் பேரீச்சம்பழம், மாம்பழம், போன்ற இனிப்பு பழங்களை தவிர்க்கலாம். மா, பலா, வாழை என்ற முக்கனிகளை தவிர்க்கலாம்.

ஆனால், கிவி பழத்தை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இந்த பழத்தில் வைட்டமின் A, C, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். சர்க்கரையின் அளவை குறைக்க, பெர்ரீ பழங்கள் அபரிமிதமாகவே உதவுவதால், இதை தைரியமாகவே சாப்பிடலாம்.

பொட்டாசியம்:

அதேபோல, ஆரஞ்சு பழம், கிட்டத்தட்ட ஒரு மருந்துபோலவே, சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படுகிறது. நார்ச்சத்து, வைட்டமின் C, ஃபோலேட், பொட்டாசியம் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயிலிருந்து விடுபட பெரிதும் துணைபுரிவது, இந்த ஒரு பழமாகத்தான் இருக்க முடியும்.

அவகடோ பழங்களை பொறுத்தவரை, ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவையாகும்.. ஏகப்பட்ட வைட்டமின்களும், தாதுக்களும் இந்த பழத்தில் உள்ளதுடன், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், நீரிழிவு அபாயத்தை இந்த அவகேடோ பழங்கள் குறைப்பதாக சொல்கிறார்கள்.

Related Post

மீண்டும் ஜெயில்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

Posted by - December 15, 2023 0
திண்டுக்கல்: லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு…

அரையாண்டு லீவ் முடிந்தது..! தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

Posted by - January 2, 2023 0
6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு. அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு கடந்த 15ஆம்…

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை – பள்ளி கல்வித்துறை அதிரடி

Posted by - December 24, 2022 0
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக்…

”பாஜக மேலிடம் சொல்லித்தான் அண்ணாமலை பேசுகிறாரா?” கேள்விகளை அடுக்கிய ஜெயக்குமார்

Posted by - September 18, 2023 0
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்…

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியதுதான் அதிமுக அரசாங்கம் – இபிஎஸ்

Posted by - April 13, 2024 0
தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியது தான் அதிமுக அரசாங்கம் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *