சீமான் பேச்சு அநாகரீகமானது அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் – கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

266 0

KS Alagiri Press Meet | தமிழர்களின் பெருமையை குறைக்கும் வகையில் சீமான் நடந்துகொள்ளக் கூடாது என சீமானுக்கு அழகிரி அறிவுரை

காவல்துறை பாதுகாப்புடன் இருந்துகொண்டு பிற மாநில மக்களுக்கு எதிராக பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவாரூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண வெற்றி விழா மற்றும் அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு பரப்புரை இயக்க துவக்க விழா நடைபெற்றது. புதிய ரயில் நிலையம் தொடங்கி, பனகல் சாலை வழியாக நடைபெற்ற பேரணியில், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், மேளதாளங்கள் முழங்க கே.எஸ்.அழகிரிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற, காவிரி டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ஈரோட்டில் காங்கிரஸின் வெற்றி எழுதப்பட்டு விட்டதாகக் கூறினார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வடமாநிலத் தொழிலாளர்கள்தான் காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதற்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, வட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்வதால் தான் திருப்பூரில் நூல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்று தெரிவித்தார். வட இந்தியர்கள் இல்லையென்றால் திருப்பூரில் தொழிற்சாலைகள் இயங்காது என்றும், அவர்களை தாக்கினால் வடமாநிலங்களில் பணியாற்றும் தமிழர்கள் தாக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் எச்சரித்தார்.

அருந்ததியர் சமூக மக்கள் தெலுங்கு பேசுவதால் அவர்களை வந்தேறிகள் என்று சீமான் பேசுவதாகவும், பெரியார், வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் அவர் இவ்வாறு விமர்சிப்பதாகவும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்.அரசியல் ஆதாயத்துக்காக இப்படி செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, தமிழர்களின் பெருமையை குறைக்கும் வகையில் சீமான் நடந்துகொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Post

நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

Posted by - April 5, 2023 0
நிலக்கரி சுரங்க அறிவிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.…

சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Posted by - February 17, 2023 0
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து…

“என்னோட கள அரசியல் பயணம் பரந்தூரில் தொடங்குகிறது” – விஜய் பேச்சு.. முழு விவரம் இதோ!

Posted by - January 20, 2025 0
விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக…

குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் அதிமுகவினர் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

Posted by - October 17, 2024 0
நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை என அமைச்சர் சேகர்…

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

Posted by - December 31, 2022 0
தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவோம்-பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொந்தளிப்பு செங்கல்பட்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை தி.மு.க.வினர் ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடபட்டனர். இதனால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *