“சென்னையில் இளம் திறனாளர்கள் அதிகம்” – சென்னை மாநாட்டில் பிரதமர் மோடி உரை

344 0

வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கிறார்கள். சிறு குறு தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது – பிரதமர் மோடி

ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்த பிரதமர் மோடி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்

சென்னை விமானநிலையத்தில் இருந்து அண்ணா சாலையில் வந்த பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசி வரும் பிரதமர் மோடி, ‘’வணக்கம் சென்னை என்று கூறி உரையைத் தொடங்கினார்.

ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் உற்சாகமாக உணர்கிறேன். இளம் திறனாளர்களை அதிகமாக கொண்டுள்ளது சென்னை. தமிழ்நாட்டிற்கும் எனக்கும் இருக்கும் உறவு மிகவும் பழமையானது. நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பழமையானது

நான் தமிழ்நாட்டிற்கு வரும்போது சிலருக்கு அச்சம்  ஏற்படுகிறது.  காரணம் என்ன தெரியுமா பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருவது தான் என்றார்.

மூன்றாவது முறை எனது ஆட்சியில் இந்தியா உலகின் 3-ஆவது பெரும் பொருளாதாரமாக மாறும். சென்னையில் ரூ.1,000 கோடி மதிப்பில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை தந்துள்ளோம். சென்னை மெட்ரோ, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட மிகப்பெரிய திட்டங்களை பாஜக அரசு கொடுத்துள்ளது

தமிழ்நாட்டை சிறப்பானதாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம்.  சென்னைக்கு பல்லாயிரக்கணக்கான கோடியில் திட்டங்களைக் கொடுத்துள்ளோம்.மிக்ஜாம் புயலின்போது மக்களுக்கு உதவ வேண்டிய திமுக அரசு, எந்தவொரு பொருட்டாகவும் கருதவில்லை. மக்களின் சுகதுக்கங்களில் மாநில அரசுக்கு அக்கறையில்லை  என்றார்.

வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கிறார்கள். சிறு குறு தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று பேசினார்.

கொரோனா பெருந்தொற்றின்போது அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. சிறு குறு நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வழங்கினோம். மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் பயனாளிகளுக்கு நேரடியாக செல்வதை திமுக விரும்பவில்லை. திமுக-வுக்கு குடும்பம்தான் முக்கியம். தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றப்படாமல் நான் தடுப்பேன்மக்களுக்கு நேரடியாக பலன்கள் செல்வதால் திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக அரசு. திமுக கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மக்களுக்கு செலவு செய்யப்படும் என்பது மோடியின் உத்தரவாதம். திமுகவுக்கு அவர்கள் குடும்பத்தினர் மீது மட்டுமே அக்கறை, பாஜகவுக்கு மக்கள் மேல் அக்கறை என்றார்.

Related Post

திருச்சியில் விஜயின் எண்ட்ரி – தமிழக அரசியல் ஆட்டம் காணுமா? திராவிட கட்சிகளின் செண்டிமெண்ட்…

Posted by - September 13, 2025 0
 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம், திருச்சியில் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம்…

நாடு முழுவதும் வேண்டாம் மோடி முழக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

Posted by - March 11, 2024 0
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், மாநில அரசுகளை மதிக்கும் அரசு மத்தியில் அமையவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற…
vijay 2

“என்னை அடக்கவே முடியாது.. மக்கள் விசில் பக்கம் தான்” – கடைசி நேரத்தில் விஜய் சொன்ன வார்த்தை!

Posted by - April 21, 2026 0
உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த மற்றும் பலர் சக்தியாலும் பிரிக்கவே…
tvk

Kolathur Election Result: ஸ்டாலினுக்கு நிகழ்ந்த துரோகங்கள்..! கொளத்தூரில் பின்தங்க காரணம் யார்? பேக் ஃபயரான விளம்பரங்கள்?

Posted by - May 4, 2026 0
Kolathur Election Results 2026: சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பின்தங்கியிருப்பது, தமிழ்நாடு அரசியலில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Kolathur…

விஜய் கட்சியின் பெயர் இதுவா?

Posted by - January 30, 2024 0
விஜய் தற்போது தமிழ் சினிமா துறையில் டாப் ஹீரோவாக வலம் வரும் நிலையில், தனது ரசிகர்கள் மன்றம் மூலமாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *