தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்

266 0

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புரைகளை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரவும், எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் களத்தில் குதித்துள்ளன. இந்த சமயத்தில் தமிழக அரசியல் களத்தில் அறிமுக கட்சியாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரியணை ஏற களத்தில் குதித்துள்ளனர்.

சமூக வலைதள பரப்புரை:

திமுக மிகப்பெரிய கூட்டணியை தங்கள் வசம் வைத்துள்ள நிலையில், அதிமுக – பா.ஜ.க.வுடன் கூட்டணியை வைத்துள்ளது. நடிகர் விஜய் கூட்டணிக்கு சில முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இணைய வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியை அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்றைய தமிழ்நாட்டில் சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய பிரச்சார ஊடகமாக மாறியுள்ளது. தொலைக்காட்சி, நாளிதழ்களை காட்டிலும் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய ஊடகமாக மாறியுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சமூக வலைதள வளர்ச்சி அபரிமிதமானது.

அரசியல் கட்சிகள் திட்டம்:

கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இதை அரசியல் கட்சிகள் பயன்படுத்தினர். ஆனால், இந்த முறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலத்த போட்டி ஏற்பட்டிருப்பதாலும் முதல் தலைமுறை வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காகவும் சமூக வலைதள பரப்புரைகளுக்கு அரசியல் கட்சிகள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்காக அதிகாரப்பூர்வமாக உள்ள அரசியல் ஐடி அணிகள் மட்டுமின்றி அதிகளவில் சமூக வலைதள பக்கங்களையும், அதை கண்காணிப்பதற்கு ஆட்களையும் நியமித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் விஜய்க்கு சமூக வலைதள பரப்புரை என்பது அவரது ரசிகர்களால் எந்தவித தடையும் இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே அவர்களை விஜய் விர்சுவல் வாரியர் என்று அழைத்தார்.

சமூக வலைதள போர்:

அதேபோல, நாம் தமிழர் கட்சியினரும் சீமானுக்கு ஆதரவாக கடந்த பல ஆண்டுகளாகவே இணையதளங்களில் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களும் அடுத்த 10 மாதங்களுக்கு தீவிரமாக செயல்பட உள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வாக்குகள் பல தொகுதிகளில் முடிவுகளையும் மாற்றும் வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது.

இதனால், முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகளவு பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அதிகளவு பரப்புரைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் தங்களது ஐடி அணிகளுக்கு உத்தரவிட்டுள்ளன. அரசியல் களத்தில் நேரடியாக நடக்கும் வார்த்தை மோதல், வார்த்தை போர்களை காட்டிலும் அடுத்த 10 மாதங்களுக்கு சமூக வலைதளங்களில் நடக்கும் வார்த்தை போர் மற்றும் கருத்து மோதல் உச்சகட்டமாகவும், உக்கிரமாகவும் நடக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

இதனால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் ஆக்கப்பூர்வமாகவும் எடுத்து வைப்பது போல எதிர்க்கட்சிகளை நாகரிகமாகவும், அதேசமயம் ஒவ்வாெரு கட்சியின் ஆதரவாளர்களில் சிலர் எதிர்க்கட்சியினரை தகாத வார்த்தைகளாலும் விமர்சிப்பார்கள் என்பதால் சமூக வலைதளம் ரணகளமாக மாறப்போகிறது என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.

Related Post

Gemini Generated Image gb5pfsgb5pfsgb5p

“எத்தகைய வெட்கக்கேடு?” – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

Posted by - March 20, 2026 0
தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பின்னணி தூத்துக்குடி மாவட்டம்…

Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” – சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி

Posted by - December 7, 2024 0
Udhaynidhi On Vijay: விஜய் பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பான கேள்விக்கு, சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என உதயநிதி பதிலளித்துள்ளார். Udhaynidhi On Vijay: திமுக பற்றிய விஜயின் பேச்சு…

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம்

Posted by - December 11, 2023 0
புதுச்சேரி: புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து…

“நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது” புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - January 22, 2025 0
‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். என்னவாக இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும்…

வர்த்தக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்தது- ரூ.1945-க்கு விற்பனை

Posted by - July 1, 2023 0
சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *