திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

370 0

தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.Ahead of Tamil Nadu polls, EPS flays Stalin over dynasty politics as Udhay  gets DMK ticket | India News

அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசி எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். நீட் தேர்வு விலக்கு, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட பொய் அறிவிப்புகள் மூலம் ஆட்சியை கைப்பற்றியதாகவும் விமர்சித்தார். மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை எங்கும் நிறைந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள், உதயநிதி ஸ்டாலினின் தலையீட்டால் வெளியிட முடியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசு புதிய திட்டங்களை கொண்டு வராமல், அதிமுகவின் திட்டங்களை முடக்குவதிலேயே முனைப்புடன் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Related Post

வேங்கை வயல் சம்பவத்தில் பட்டியல் சமூக மக்களை திமுக ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - April 16, 2024 0
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யாமல் இருப்பதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!

Posted by - March 21, 2025 0
வட மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்த கருத்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரயில் நிலையம்…

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்!

Posted by - November 23, 2023 0
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார். கேரள மாநிலம் பத்தினம்திட்ட பகுதியை சேர்ந்த பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *