தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய பிரச்சினையாகிடும்

197 0

டெல்லி:

உடல் எடையைக் குறைக்க முயல்வோர் நிச்சயம் சில வகை உணவுகளை ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

உடல் பருமனைக் குறைக்க எப்போதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று எந்தவொரு அவசியமும் இல்லை. சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டாலும் கூட உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியும்.

இதற்கு நீங்கள் சில விஷயங்களில் கவனமாக இருந்தால் போதும். சில வகை உணவுகள் எடை குறைப்பு பயணத்தைத் தாமதமாக்கும். அத்துடன் கொழுப்பை ஏற்படுத்தும் சில உணவுகளைச் சேர்த்துச் சாப்பிட்டால், மீண்டும் எடை கூடிவிடும் ஆபத்தும் இருக்கிறது.தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய  பிரச்சினையாகிடும் | What are the five food combinations that need to avoid  at all costs for ...

உடல் எடை:

இந்த குறிப்பிட்ட உணவுகளை நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் போதும் உடல் எடை மளமளவென குறையும். அதேபோல நீங்கள் சமைக்கும் போது எப்படிச் சமைக்கிறீர்கள் என்பதும் முக்கியம். உணவின் சுமை மட்டுமில்லை, உடல் எடையையும் கூட இது மாற்றும். நீங்கள் சமைக்கும் முறையும் கூட உணவில் இருக்கும் கலோரி எண்ணிக்கையை மாற்றும்..

அதாவது ஒரு காய்கறி அல்லது அசைவ உணவை டீப் ஃப்ரை செய்தால் அதன் கலோரி எண்ணிக்கை அதிகரிக்கும். அதேநேரம் வேகவைத்துச் சாப்பிட்டால் கலோரி எண்ணிக்கை குறையும். மேலும், உணவை டேஸ்ட் ஆன ஒன்றாக மாற்ற அதில் எலுமிச்சை, தேன், பேரீச்சம்பழம், உலர் பழங்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். இது உணவின் சுவையையும் கூட்டும் உடல் எடை அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ளும்.

அரிசி & உருளைக்கிழங்கு:

அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கிறது. இதனால் அரிசி சாதத்தை அதிகம் சாப்பிட்டால் அது உடல் எடை அதிகரிப்புக்குக் காரணமாக அமையும். அரிசி எளிதில் ஜீரணிக்கக்கூடியது தான் என்றாலும் அதை அளவாகச் சாப்பிட வேண்டும். அரிசி சாதம் சாப்பிடும் போது அத்துடன் உருளைக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.

அவை இரண்டும் உடலுக்குக் கொழுப்பைத் தரும். உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் இருக்கிறது. அதை அரிசி சாதத்துடன் சாப்பிடும் உடலில் கலோரி எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இந்த இரண்டு உணவுகளை நிச்சயம் ஒன்றாகச் சாப்பிடக் கூடாது.

ரொட்டி மற்றும் தயிர்:

பெரும்பாலும் எதாவது அவசரம் என்றால் நாம் ரொட்டி மற்றும் தயிரைத் தான் சாப்பிடுவோம், ரொட்டி என்பது மைதாவில் இருந்து செய்யப்பட்டது. அதில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் மைதா ரொட்டியை தான் முதலில் தவிர்க்க வேண்டும். அதேபோல ரொட்டி சாப்பிடும் போது தயிரைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

அதுவும் நமது உடல் எடையை அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது. சில நேரங்களில் அதிகளவில் புரதம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டால் அதுவும் கூட செரிமான அமைப்பைக் குழப்பம். இதுவும் உடல் பருமன் அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடும். எனவே, நீங்கள் சிக்கன் மற்றும் பருப்பு உள்ளிட்ட புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை ஒன்றாகச் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் இது உடல் எடை அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடும்.

கண்டிப்பாகக் கூடாது:

தின்பண்டங்கள் மற்றும் டீ, காபி ஆகிய இரண்டையும் ஒன்றாகக் குடிக்க வேண்டாம். இந்த இரண்டையும் நாம் ஒன்றாகச் சாப்பிட்டால் அது வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி பிஸ்கட்கள் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் சர்க்கரை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் அதிகமாக இருப்பதால், அவை உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். தின்பண்டங்களை நீங்கள் தவிர்க்காவிட்டால் உடல் எடையை உங்களால் குறைக்கவே முடியாது.

பால் மற்றும் வாழைப்பழம்:

இந்த இரண்டிலும் அற்புதமான ஊட்டச்சத்து இருக்கிறது. இருப்பினும், இந்த இரண்டையும் ஒன்றாகச் சாப்பிட்டால், அது உடலில் இருக்கும் சத்துக்களை காலி செய்துவிடும். மேலும், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, பால் மற்றும் தயிர் என இரண்டையும் சாப்பிட விரும்பினால் குறைந்தது 20-30 நிமிடங்கள் கேப் விடுவது நல்லது.

Related Post

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2025 0
தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு

Posted by - December 7, 2023 0
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர்…

காதலன்தான் எல்லாம் என்ற மாயையில் வாழ்வை இழக்கும் சிறுமிகள்- ஆண் நண்பர்கள் இல்லாததை அவமானமாக கருதும் அவலம் …

Posted by - March 11, 2025 0
காதல்… 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று…

Voter ID இல்லையா? கவலை வேண்டாம்.. இந்த 12 ஆவண்ங்களில் ஒன்று இருந்தால் போதும்

Posted by - April 18, 2024 0
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை…

இமாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - February 21, 2023 0
சிம்லா: இமாசல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவின் வடக்கே 56 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 10.38 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *