நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த “இடி”.. திணறும் தர்மபுரி

246 0

தர்மபுரி:

தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு, மாடு, கோழி, கடல் உணவுகளின் விலை கடுமையாக சரிவடைவது வழக்கம்.. காரணம் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை உண்ண மாட்டார்கள்..

அந்தவகையில், இந்த வருடமும் புரட்டாசி மாதம் தொடங்கியிருக்கிறது.. இதனால், ஆடு, மாடு, கோழி, முட்டை, மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. இறைச்சியை குறைவான அளவிலேயே வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டது.

திருப்புவனம் சந்தை:

குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டுவது வழக்கம்.. இந்த திருப்புவனம் மார்க்கெட்டில்தான், வாரம்தோறும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை கால்நடை சந்தையும், பிறகு காய்கறி சந்தையும் நடைபெறுவது வழக்கம். கால்நடை சந்தையில் ஆடு, கோழி, தவிர, சேவல், வாத்து போன்றவைகளும் விற்பனை செய்யப்படும்.. இதற்கு காரணம், திருப்புவனத்தைச் சுற்றிலும் பெத்தானேந்தல், மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் ஆடு, கோழிகளை விவசாயிகள் வளர்த்து, இங்குவந்துதான் விற்பனை செய்கிறார்கள்.. எப்போதுமே 300 முதல் 1000 ஆடு, கோழிகள் வரை விற்பனையாகும்.. ஆனால், புரட்டாசி புரட்டாசி தொடங்கிவிட்டதால், ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தும் சரியாக விலைக்கு போகவில்லையாம்.

ஆட்டுக்கறி:

10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10,000 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இப்போது, வெறும் ரூ.8000க்கு மட்டுமே விலை போவதாக கவலையுடன் கூறுகிறார்கள். நாட்டுக்கோழி விலையும், கிலோவுக்கு ரூ.350 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.. இப்போது, ரூ.450ஆக உயர்ந்துவிட்டதாம். 25 கிலோ எடை கொண்ட கிடா 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. புரட்டாசி மாதம் முடியும் வரைக்கும், இறைச்சி விலை குறைவாகவே விற்கப்படும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வருத்தம்:

இதுபோலவே, தர்மபுரி மாவட்டத்திலும் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.. இங்குள்ள நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.. இதற்காகவே வியாபாரிகள், கால்நடைகளை கொண்டுவந்து இங்கு விற்றுவிட்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.. இதற்காகவே, ஆட்டுச்சந்தை பிரத்யேகமாக நடைபெற்றும் வருகின்றது.. தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்காக இன்று வந்திருந்தனர்.

விற்பனை:

ஆனால், காலை 6 மணிக்கு கூடிய ஆட்டுச்சந்தையில் சிறிய அளவில ஆடுகள் 2, 500 ரூபாயில் துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 16,000 ரூபாயில் வரை மட்டுமே விற்பனையானதாம்.. இந்த புரட்டாசி முடியும்வரை இப்படித்தான் மந்த நிலையில் விற்பனையாகும் என்கிறார்கள்.

Related Post

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

Posted by - February 19, 2024 0
Tamil Nadu Budget 2024: மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு…

ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..

Posted by - June 12, 2025 0
பொன்முடி ஓசி பஸ் என சொன்னது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் திமுக MLA-ஏ இப்படி சொல்லியிருப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது. பெண்கள் ஓசி பஸ்ஸில்…

உங்களுக்கு ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப இரும்புசத்து குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கு… உடனே இத சாப்பிடுங்க!

Posted by - October 25, 2023 0
நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும், நம் உடலின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இரும்புசத்து நம் உடலுக்கு மிகவும் அவசியமான…

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Posted by - May 31, 2023 0
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *