நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

226 0

சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை விவரம் இன்று (திங்கள் கிழமை) அறிவிக்கப்பட்டது.

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அபராதம் ரூ.50 ஆயிரமும் விதிக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

சஞ்சய் ராய் குற்றவாளி

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து அடுத்த நாளே அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது.

விசாரணையில் சஞ்சய் ராய் மீது பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பாக சஞ்சய் ராய் மீது குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மொத்த விசாரணையும் மூடிய அறைக்குள் கேமரா பதிவுடன் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், சிபிஐ, போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள், ஊழியர்கள் என 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டன. கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை விவரம் இன்று (திங்கள் கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்படி, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அபராதம் ரூ.50 ஆயிரமும் விதிக்கப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Related Post

பள்ளி, கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்.. முக்கிய கட்டுப்பாடுகள் – அதிரடி

Posted by - December 26, 2022 0
Restrictions | கொரோனா மீண்டும் தலைதூக்கும் நிலையில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை தொடங்கியுள்ளன கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு கட்டுப்பாடு…

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Posted by - August 21, 2023 0
புதுடெல்லி: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின்…

இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம்: பிரதமர் மோடி தகவல்

Posted by - July 14, 2023 0
இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத்…

கடன்பட்டது 100 ரூபாய்… 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி கொடுத்த ஆசிரியர்

Posted by - June 8, 2023 0
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர்…
idfc bank

590 கோடி மோசடி: IDFC First Bank பங்கு 20% சரிவு – முதலீட்டாளர்களுக்கு ₹14,000 கோடி இழப்பு!

Posted by - February 25, 2026 0
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான IDFC First Bank பெரிய மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளது. வங்கியின் சண்டிகர் கிளையில் நடந்ததாக கூறப்படும் ₹590 கோடி முறைகேடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *