பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த டாக்டர்கள்- ஒரு வருடத்திற்கு பிறகு அகற்றம்

216 0

திருப்பதி:

மாநிலம் ஜகித்யாலா பகுதியை சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நவ்யா ஸ்ரீக்கு சுகப்பிரசவம் நடக்காததால் டாக்டர்கள் ஆபரேசன் மூலம் வயிற்றிலிருந்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர். இதற்கு அவரது கணவர் மற்றும் உறவினர்களும் ஒப்புதல் அளித்தனர்.CARE Hospital | CHL Hospital: CARE acquires Indore's specialty hospital CHL

இதையடுத்து நவ்யா ஸ்ரீக்கு ஆபரேசன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது ஆபரேசன் செய்த டாக்டர்கள் நவ்யாஸ்ரீயின் வயிற்றில் துணியை மறந்து வைத்து தைத்துவிட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நவ்யா ஸ்ரீக்கு நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்து வந்தது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றனர். ஆனால் வயிற்று வலி குறையவில்லை.

இதையடுத்து டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் துணி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நவ்யா ஸ்ரீக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த துணி அகற்றப்பட்டது. இதுகுறித்து செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

கலெக்டர் யாஸ்மின் பாஷா நவ்யா ஸ்ரீக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனை தொடர்ந்து டாக்டர் மற்றும் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Post

ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி…. முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்….

Posted by - August 12, 2024 0
இந்திய பங்குச்சந்தைகள் தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. ஹிண்டன்பர்க், அதானி விவகாரத்தினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அதானி குழும நிறுவனங்களின் செபி தலைவர் முதலீடு இருப்பதாக…

வரலாற்றை மாற்றும் ஆம் ஆத்மி..! அதள பாதாளத்தில் காங்கிரஸ்..!

Posted by - December 8, 2022 0
டெல்லி சட்டசபைத் தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல் என அடித்து ஆடி வரும் ஆம் ஆத்மி, தற்போது குஜராத், இமாச்சல் பிரதேசம் தேர்தல்களிலும் கவனம்…

இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!”

Posted by - February 25, 2026 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார். “நல்லகண்ணு உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…

பங்குச் சந்தை சரிவிற்குப்பின் கவனம் பெற்ற பங்குகள்.. இன்னைக்கு கவனிக்காம விட்ராதீங்க!

Posted by - August 6, 2024 0
அமெரிக்க, ஜப்பான் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை கடும் இழப்பை ஆகஸ்ட் 5 அன்று சந்தித்தது. இந்நிலையில் இன்று சந்தையில் கவனம் பெறப்போகும்…

30 மணி நேரம் தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானம்- 2 பேரின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது

Posted by - August 2, 2023 0
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *