புதுச்சேரி, தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகை, தியாக உணர்வுடன் இஸ்லாமியர்கள்

103 0

பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.  திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள். மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி, நகர பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் காலை சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லித்தோப்பு ஈத்கா மைதானம், முல்லா வீதி குத்பா பள்ளி வாசல், சந்தாசாஹிப் தெரு அகமதியா பள்ளி வாசல், கோவிந்த சாலை மஸ்ஜிதுந்நூர், பெரியகடை பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். காரைக்கால்காரைக்காலில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின், ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரித் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். காரைக்கால் மீராப்பள்ளி தோட்டம், கீதர் பள்ளிவாசல், செய்கு மொய்தீன் பள்ளி வாசல், பெரிய பள்ளிவாசல், புளியங்கொட்டை சாலை மஸ்ஜிதே, மொய்தீன் பள்ளிவாசல்களில் சிறப்பபு தொழுகை நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையின் போது, இஸ்லாமியர்கள் பல இடங்களில் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகரில் உள்ள பல பள்ளிவாசல்களிலும், குறிப்பாக மஹல்லா பள்ளி வாசல், வாலாஜா பள்ளி வாசல், தக்குவா பள்ளி வாசல், ரஹ்மான் பள்ளி வாசல், மதினா பள்ளி வாசல் போன்ற இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. மேலும், விழுப்புரம் நகராட்சி காமராஜர் பள்ளி மைதானத்தில் முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். காணை அபுபக்கர் சித்திக் பள்ளி வாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. திண்டிவனத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டிவனத்திலுள்ள 15 பள்ளி வாசல்களில் இருந்தும்  காலை 8 மணியளவில் முஸ்லிம்கள் ஊர்வலமாகசென்று, செஞ்சி ரோட்டில் உள்ள கபர்ஸ்தான் ஈத்கா மைதானத்தில்  சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Related Post

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் – புகைப்படங்கள்!

Posted by - January 27, 2023 0
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்…

விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?

Posted by - August 23, 2024 0
விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? விரிவாக பார்க்கலாம்.நடிகர் விஜய் தனது அரசியல்…

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

15 இடங்களில் சதமடித்தது… மக்கள் கடும் அவதி…!

Posted by - May 18, 2023 0
சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது. அதிகபட்சமாக வேலூர்…

நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

Posted by - January 10, 2025 0
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *