புதுச்சேரி, தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகை, தியாக உணர்வுடன் இஸ்லாமியர்கள்

123 0

பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.  திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள். மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி, நகர பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் காலை சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லித்தோப்பு ஈத்கா மைதானம், முல்லா வீதி குத்பா பள்ளி வாசல், சந்தாசாஹிப் தெரு அகமதியா பள்ளி வாசல், கோவிந்த சாலை மஸ்ஜிதுந்நூர், பெரியகடை பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். காரைக்கால்காரைக்காலில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின், ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரித் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். காரைக்கால் மீராப்பள்ளி தோட்டம், கீதர் பள்ளிவாசல், செய்கு மொய்தீன் பள்ளி வாசல், பெரிய பள்ளிவாசல், புளியங்கொட்டை சாலை மஸ்ஜிதே, மொய்தீன் பள்ளிவாசல்களில் சிறப்பபு தொழுகை நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையின் போது, இஸ்லாமியர்கள் பல இடங்களில் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகரில் உள்ள பல பள்ளிவாசல்களிலும், குறிப்பாக மஹல்லா பள்ளி வாசல், வாலாஜா பள்ளி வாசல், தக்குவா பள்ளி வாசல், ரஹ்மான் பள்ளி வாசல், மதினா பள்ளி வாசல் போன்ற இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. மேலும், விழுப்புரம் நகராட்சி காமராஜர் பள்ளி மைதானத்தில் முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். காணை அபுபக்கர் சித்திக் பள்ளி வாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. திண்டிவனத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டிவனத்திலுள்ள 15 பள்ளி வாசல்களில் இருந்தும்  காலை 8 மணியளவில் முஸ்லிம்கள் ஊர்வலமாகசென்று, செஞ்சி ரோட்டில் உள்ள கபர்ஸ்தான் ஈத்கா மைதானத்தில்  சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Related Post

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

ராமதாஸ் ஐசியுவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை: மருத்துமனையில் அன்புமணி பேட்டி

Posted by - October 6, 2025 0
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதயம் தொடர்பான…

சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 20, 2022 0
weather update | சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என…

கோடை வெயில் தொடங்கும் முன்பே குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டன

Posted by - February 20, 2023 0
தென்காசி: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.…

8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி- திடுக்கிடும் தகவல்கள்

Posted by - July 11, 2023 0
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *