பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

107 0

மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அரங்கு அமைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான அரசு தரப்பு, மாநாட்டில் அறுபடை கோயில்களின் மாதிரி அமைப்புகள் அமைத்து வழிபாடு நடத்தினால், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில், அரங்கு அமைத்து காலை, மாலை என 2 மணி நேரம் மட்டுமே வழிபாடு நடத்த உள்ளதால் அனுமதி வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதே பகுதியில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது, தற்போது மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அரங்கு அமைக்க அனுமதி மறுத்து, அரசு தரப்பு கூறிய காரணங்கள் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்த நீதிபதி, காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், அரசியல் சார்புடன் செயல்பட கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

மேலும் மனு குறித்து, மதுரை மாநகர காவல் ஆணையர், பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Post

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை.. அதிமுக பொதுச் செயலாளர்கள் லிஸ்ட்..!

Posted by - March 28, 2023 0
அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இதுவரை பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்ந்தது யார் யார் என்று தற்போது பார்க்கலாம்.…

“திராவிட மாடல் ஆட்சி… மக்கள் விரோத ஆட்சி” – திமுகவை நேரடியாக சாடிய தவெக தலைவர் விஜய்!

Posted by - October 28, 2024 0
தவெக முதல் மாநில மாநாட்டில் தங்களின் அரசியல் எதிரி யார் என தவெக தலைவர் விஜய் பேசினார். தவெக மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி, வி சாலை…

கழுத்து பகுதியில் Tattoo குத்திய இளைஞர் பலி.. நடந்தது என்ன? எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் பி பரவும் ஆபத்து

Posted by - September 7, 2023 0
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கழுத்து பகுதியில் டாட்டூ குத்தியதால் இளைஞர் ஒருவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கியுள்ளார்கள். அந்த…

மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்

Posted by - September 25, 2023 0
ஈரோடு: தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து தங்களை மீட்க வலியுறுத்தி ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன. தொழில்துறை…

தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை

Posted by - August 4, 2023 0
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *