சென்னையில் உச்சகட்ட பதற்றம்…. குவிந்த போலீசார் |

145 0

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் இன்று (டிசம்பர் 26) சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக அரசு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றைக் கோடி, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரம் அடையும் போராட்டங்கள்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையறை அற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. ஒப்பந்த செவிலியர்களும் 7 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்களும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி, அதாவது சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

அந்த வகையில், எஸ்எஸ்டிஏ எனப்படும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று (டிசம்பர் 26) சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும் பலர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடநூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்த நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர்.

மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் பாடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா – சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?

Posted by - June 7, 2025 0
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அது என்ன தெரியுமா.? நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5…

தவெகவின் கட்சி சின்னம் லிஸ்ட் ரெடி! விஜய் டிக் அடிக்கப்போவது எது?

Posted by - May 22, 2025 0
விஜய் கட்சியை தொடங்கி ஓராண்டை கடந்துள்ள நிலையில்  தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி, பொதுவான தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் என்கிற…

அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா – விளக்கம் அளித்த ஆண்டாள் கோயில் நிர்வாகம்!

Posted by - December 16, 2024 0
அதைத் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வைத்து இளையராஜாவிற்கு மரியாதை அளித்தனர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் “திவ்ய…

மன்சூர் அலிகானிடம் விரைவில் விசாரணை: சம்மன் அனுப்பி அழைக்க இருப்பதாக போலீசார் தகவல்

Posted by - November 22, 2023 0
சென்னை: நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்…

நிலக்கரி எடுக்க எழுந்த எதிர்ப்பு… டெல்டாவில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *