மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்

220 0

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இங்கு வன்முறை இன்னும் முழுமையாக ஓயவில்லை.

இந்த நிலையில் உயிரிழப்பு, சேதம் குறித்த தகவல்களை ஐ.ஜி.க்கள் வெளியிட்டுள்ளனர். ஐ.ஜி. (செயல்பாடுகள்) ஐ.கே. முய்வா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மணிப்பூரில் இந்த சவாலான நேரத்தில் காவல்துறை, மத்தியப் படைகள் மற்றும் சிவில் நிர்வாகம் ஆகியவை இயல்பு நிலை திரும்ப 24 மணி நேரமும் முயற்சி செய்து வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க முடியும்.மணிப்பூரில் உக்கிரமடையும் கலவரம்.! தமிழர் பகுதியில் வெடித்த வன்முறை  (காணொளி) - ஐபிசி தமிழ்
வன்முறையின்போது, ஆயுத கிடங்குகளில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுவரை 1,359 துப்பாக்கிகள் மற்றும் 15,050 வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. 5,172 தீவைப்பு சம்பங்கள் நடைபெற்றுள்ளன. 254 கிறிஸ்தவ ஆலயங்கள், 132 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பிஷ்னுபுர் மாவட்டம் பௌகாக்சாயோ இகாயில் இருந்து சுரசந்த்புர் மாவட்டம் கங்வாய் வரையிலான பாதுகாப்பு தடுப்புகள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.ஜி. (நிர்வாகம்) கே. ஜெயந்தா கூறியிருப்பதாவது:- 175 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 79 உடல்கள், உறவினர்களால் உரிமைக்கோரப்பட்டுள்ளது. 96 பேர் உடல்கள் உரிமைக்கோரப்படவில்லை. இம்பாலில் உள்ள மருத்துவமனைகளில் 56 உடல்களும், சுரசந்த்புர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 42 பேர் உடல்களும் வைக்கப்பட்டுள்ளது. 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஜெயந்தா தெரிவித்துள்ளார். மண்டலம்-3 ஐ.ஜி. நிஷித் உஜ்வால் கூறியிருப்பதாவது:- தேசிய நெடுஞ்சாலை 32, தேசிய நெடுஞ்சாலை 2 ஆகியவற்றில் தற்போது வழக்கமான முறையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

Related Post

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 16, 2023 0
புதுடெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…

போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

Posted by - July 31, 2024 0
Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம்…

பெங்களூரு பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.97ஆயிரம் மோசடி: மும்பை கும்பல் துணிகரம்

Posted by - September 4, 2023 0
பெங்களூரு: பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசில் ஒரு…

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கை இப்போதே விற்றுவிடுகள்… எச்சரிக்கும் நிபுணர்க்ள்…. காரணம் என்ன?

Posted by - August 14, 2024 0
சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒராண்டாகவே பெரும் ஏற்றத்தை அடைந்து வருகிறது. அதாவது இந்த பங்கின் விலை ஒரு வருடத்தில் 300 சதவிகிதம் வரை…

”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!

Posted by - July 17, 2025 0
காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது என ஜோதிமணி கடுமையாக சாடினார். திமுக எம்.பி திருச்சி சிவா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *