மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவோம்! – இபிஎஸ் பிரகடனம் அதிமுகவுக்கு அனுகூலம் சேர்க்குமா?

192 0

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டது அதிமுக அரசு. இதன் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு தேர்தலில் பெரும் சரிவை உண்டாக்கியதாக அப்போது சர்ச்சைகள் வெடித்தன.

இந்த நிலையில் அதற்கு பரிகாரம் தேடும் விதமாக, “தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டவும் மத்திய அரசை வலியுறுத்துவோம்” என திண்டுக்கல் பிரச்சாரத்தில் திடீர் பிரகடனம் செய்திருக்கிறார் இபிஎஸ். இதுவும் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.இபிஎஸ்​ஸின் இந்த அறி​விப்​புக்கு தேவரின அமைப்​பு​கள் பாராட்டு தெரி​வித்து வரவேற்​றுள்​ளன. இதனால் கலவரப்​பட்ட அமமுக பொதுச்​செயலாளர் டி.டி.​வி.​தினகரன், ‘‘தென் மாவட்​டங்​களில் ஒற்​றுமையை குலைக்​கும் வகை​யில் இபிஎஸ் இந்த வெற்று வாக்​குறு​தியை தந்​துள்​ளார்” என்​றார். தினகரனின் இந்​தக் கருத்தை அவருக்கு எதி​ராகவே திருப்​பி​விட்ட அதி​முக-​வினர், “தேவ​ருக்கு பெருமை சேர்ப்​பது தினகரனுக்கு பிடிக்​க​வில்​லை” என கொளுத்​திப் போட்​டனர்.இதனால் மேலும் பதற்​ற​மான தினகரன், “2021 சட்​டமன்ற தேர்​தலின் போது, தேவர் திரு​மக​னாரின் பெயரை மதுரை விமான நிலை​யத்​திற்கு வைக்க வேண்​டும் எனவும் தேவர் திரு​மக​னாருக்கு பாரத ரத்னா விருது வழங்​கப்பட வேண்​டும் எனவும் நாங்​கள் தேர்​தல் வாக்​குறு​தி​யிலேயே சொல்லி இருக்​கி​றோம்” என தனி​யாக பிரஸ் மீட் போட்டு தன்​னிலை விளக்​கம் கொடுத்​தார்.

மதுரை விமான​நிலை​யத்​துக்கு தேவர் பெயர் சூட்ட வேண்​டும் என்ற கோரிக்​கை​யானது சுப்​பிரமணி​யன் சுவாமி மதுரைக்கு எம்​பி-​யாக இருந்த காலத்​தி​லிருந்தே விவாதத்​தில் இருக்​கிறது. இருப்​பினும், அண்​மைக் காலத்​தில் இதுகுறித்து யாரும் பேசாத நிலை​யில், தேர்​தல் சமயத்​தில் தேவரின மக்​களின் அபி​மானத்​தைப் பெறு​வதற்​காக இபிஎஸ் திடீரென தேவர் பெயரை தூக்​கிப் பிடித்​திருப்​பது, அதி​முக-வை ஆதரிக்​கும் பட்​டியலின மக்​கள் மத்​தி​யில் அதி​முக-வுக்கு எதி​ரான சிந்​தனையை விதைக்​கக் கூடும் என்​கி​றார்​கள்.

அதற்​கேற்ப இபிஎஸ்​ஸின் கருத்​துக்கு உடனே ரியாக்​‌ஷன் காட்​டிய புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி, “தேர்​தல் நேரத்​தில் ஆளுங்​கட்​சி​யின் குறை​கள், மக்​கள் பிரச்​சினை​களை சுட்​டிக்​காட்​டித்​தான் பிரச்​சா​ரம் செய்​ய​வேண்​டும். ஆனால், அதைப் பற்​றியெல்​லாம் பேசாமல் சம்​பந்​தமில்​லாமல் ஏற்​கெனவே முடிந்​து​போன விஷ​யத்​தைப் பற்றி பழனி​சாமி பேசி இருக்​கி​றார்.

மறைந்த தலை​வர்​களின் பெயர்​களை மாவட்​டம், போக்​கு​வரத்து கழகங்​களுக்கு வைக்​கக்​கூ​டாது என்ற அரசாணை அமலில் இருக்​கும்​போது, தற்​போது மதுரை விமான நிலை​யத்​திற்கு தலை​வர் ஒரு​வரின் பெயரை வைப்​பது குறித்து யாருடைய தூண்​டு​தலின் பெயரிலோ பழனி​சாமி பேசி இருக்​கி​றார்” என்​றார்.

இது தொடர்​பாக நம்​மிடம் பேசிய தென்​னிந்​திய ஃபார்​வர்டு பிளாக் கட்​சி​யின் தலை​வர் கே.சி.​திரு​மாறன், “மதுரை விமான நிலை​யத்​திற்கு தேவர் பெயரைச் சூட்ட வேண்​டும் என்ற கோரிக்கை 1996-லிருந்தே இருக்​கிறது. தாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால் விமான நிலை​யத்​திற்கு தேவர் பெயரை சூட்ட நடவடிக்கை எடுப்​போம் எனச் சொல்லி இருந்​தார் ஸ்டா​லின். ஆனால், அதற்​கான எந்த முயற்​சி​யை​யும் அவர் எடுக்​க​வில்​லை.

அதனால் அதி​முக மீது நம்​பிக்கை வைத்​து, விமான நிலை​யத்​துக்கு தேவர் பெயரை வைக்​க​வும், தேவ​ருக்கு பாரத ரத்னா விருது வழங்​க​வும் மத்​திய அரசை வலி​யுறுத்த வேண்​டும் என இபிஎஸ்​ஸிடம் கோரிக்கை வைத்​தோம். அதை ஏற்றே அவர் தற்​போது வாக்​குறுதி அளித்​துள்​ளார். அவரது இந்த அறி​விப்​பால் தென் மாவட்​டத்​தில் அதி​முக கடந்த தேர்​தலில் இழந்த செல்​வாக்கை இம்​முறை மீட்​டெடுக்​கும்” என்​றார்.

வன்​னியருக்கு உள் இடஒதுக்​கீடு வழங்​கப்​பட்ட விவ​காரத்​துக்கே ஆண்​டு​கள் ஐந்​தாகி​யும் இன்​னும் விடை தெரிய​வில்​லை. இந்த நிலை​யில் புதி​தாக இன்​னொரு சர்ச்​சைக்கு பூஜை போட்​டிருக்​கிறார் இபிஎஸ்​!

Related Post

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

Posted by - April 11, 2026 0
திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி…

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Posted by - January 13, 2026 0
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

Posted by - November 17, 2025 0
அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை…

கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

Posted by - March 3, 2026 0
பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *