OPS

மனம் திறந்த ஓபிஎஸ்.பொறுமையாக இருந்தது ஏன்?

47 0

ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக- ஓபிஎஸ்.

கட்சி விதியை மாற்றும் உரிமை யாருக்கு இருக்கிறது? எம்ஜிஆர் கைப்பட எழுதி வைத்த விதியை மாற்றினார்கள். என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. இதையொட்டி கூட்டணியை கட்சிகள் மும்முரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆகவும் முன்னாள் முதல்வராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படாமல், தனித்து விடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தேனி, போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

’’ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக. கட்சி விதியை மாற்றும் உரிமை யாருக்கு இருக்கிறது? எம்ஜிஆர் கைப்பட எழுதி வைத்த விதியை மாற்றினார்கள்.

எனக்கு ஏன் இந்த நிலை?

எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். தர்ம யுத்தம் செய்தபோது எம்ஜிஆருக்கு நூற்றாண்டு வயது. அரசின் சார்பில் அப்போது விழா கொண்டாடப்பட்டது. தர்ம யுத்தம் மேற்கொண்டபோது அனைவரும் ஆதரவு அளித்தனர். கொங்கு மண்டலமே கூடி நின்று எங்களை வரவேற்றது. கட்சி நலனுக்கான கட்சியை நானும் ஆட்சியை ஈபிஎஸ்ஸும் பார்த்துக்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது.  அதன் பிறகு நடந்தது உங்களுக்கே தெரியும்.

நடந்த பிரச்சினைகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். மிக மிகப் பொறுமையாக நடந்துகொண்டேன். கட்சியும் ஆட்சியும் முக்கியம் என்று நினைத்து இருந்தேன். என்னுடைய மனப் பக்குவம்தான் அதற்கு காரணம்.

எதிர்க் கட்சிகளிடம் உறவா?

யாரையும் நான் கடுஞ்சொல் சொன்னதில்லை. எதிர்க் கட்சிகளிடம்கூட தார்மீக ரீதியாக இன்முகத்துடன் பேசுவேன். அவர்களிடம் எவ்வித உதவிகளையும் பெற்றது கிடையாது.

எந்த நேரத்திலும் நான் துரோகம் செய்ததில்லை. கட்டாயப்படுத்தி என்னை முதல்வர் ஆக்கினர். ஆனாலும் யாரையும் அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ நான் பணியாற்றவில்லை’’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Related Post

ASDFGH

ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

Posted by - February 20, 2026 0
சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய்…

ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!

Posted by - July 25, 2025 0
Anbumani Walking Rally: “அன்புமணி நடைபயணத்திற்கு எதிராக ராமதாஸ் மிரட்டுவதாக அன்புமணி ஆதவாளர்கள் புகார்” பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல்…

’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Posted by - August 19, 2025 0
‘காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது’‘மக்களை காப்போம்,…

கரூர் துயர சம்பவம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்..

Posted by - October 13, 2025 0
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார்.…
tvk vijay

TVK Vijay : ’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?

Posted by - April 30, 2026 0
‘இந்தியா டு டே நிறுவன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அடிப்படையில் விஜய் 90 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லையென்றும், இது திரைப்படத்திலும் கனவிலுமே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *