மனம் திறந்த ஓபிஎஸ்.பொறுமையாக இருந்தது ஏன்?

31 0

ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக- ஓபிஎஸ்.

கட்சி விதியை மாற்றும் உரிமை யாருக்கு இருக்கிறது? எம்ஜிஆர் கைப்பட எழுதி வைத்த விதியை மாற்றினார்கள். என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. இதையொட்டி கூட்டணியை கட்சிகள் மும்முரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆகவும் முன்னாள் முதல்வராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படாமல், தனித்து விடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தேனி, போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

’’ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக. கட்சி விதியை மாற்றும் உரிமை யாருக்கு இருக்கிறது? எம்ஜிஆர் கைப்பட எழுதி வைத்த விதியை மாற்றினார்கள்.

எனக்கு ஏன் இந்த நிலை?

எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். தர்ம யுத்தம் செய்தபோது எம்ஜிஆருக்கு நூற்றாண்டு வயது. அரசின் சார்பில் அப்போது விழா கொண்டாடப்பட்டது. தர்ம யுத்தம் மேற்கொண்டபோது அனைவரும் ஆதரவு அளித்தனர். கொங்கு மண்டலமே கூடி நின்று எங்களை வரவேற்றது. கட்சி நலனுக்கான கட்சியை நானும் ஆட்சியை ஈபிஎஸ்ஸும் பார்த்துக்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது.  அதன் பிறகு நடந்தது உங்களுக்கே தெரியும்.

நடந்த பிரச்சினைகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். மிக மிகப் பொறுமையாக நடந்துகொண்டேன். கட்சியும் ஆட்சியும் முக்கியம் என்று நினைத்து இருந்தேன். என்னுடைய மனப் பக்குவம்தான் அதற்கு காரணம்.

எதிர்க் கட்சிகளிடம் உறவா?

யாரையும் நான் கடுஞ்சொல் சொன்னதில்லை. எதிர்க் கட்சிகளிடம்கூட தார்மீக ரீதியாக இன்முகத்துடன் பேசுவேன். அவர்களிடம் எவ்வித உதவிகளையும் பெற்றது கிடையாது.

எந்த நேரத்திலும் நான் துரோகம் செய்ததில்லை. கட்டாயப்படுத்தி என்னை முதல்வர் ஆக்கினர். ஆனாலும் யாரையும் அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ நான் பணியாற்றவில்லை’’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Related Post

தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு?

Posted by - April 3, 2026 0
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜென் இசெட் (Gen Z) வாக்காளர்கள் முக்கியமான தீர்மான சக்தியாக உருவெடுத்துள்ளனர். சுமார் 1 கோடியே 18 லட்சம்…

சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! – மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்

Posted by - November 13, 2025 0
தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், பொன்​முடிக்​கும் விழுப்​புரம் மத்​திய மாவட்ட திமுக செய​லா​ள​ரான…

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

Posted by - November 8, 2025 0
சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம்…

அதிமுக+ Vs தவெக: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது யாருக்கு அதிக பாதிப்பு?

Posted by - February 19, 2026 0
ஒருவழியாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது தேமுதிக. பிரேமலதா எடுத்த இந்த அதிரடி முடிவால், அதிமுக கூட்டணிக்கு ஏற்படப்போகும் இழப்புகள் என்ன? தவெகவின் மனநிலை…

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *