மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

198 0

கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் என்ற செய்தி வந்துள்ளது எனவும்,

சென்னைக்கு மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருள்கள் என அனைத்தும் தாமதமில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் முக்கியமாக மலைப்பகுதிகள், தாழ்வான இடங்கள், குடிசை, மருத்துவமனை மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக மழை வெள்ளம் ஏற்படும்போது 95 சதவீதம் வேலைகள் நிறைவுபெற்று விட்டதாகச் கூறும் திமுக அரசு, இன்றைக்கு வரைக்கும் எந்தவொரு வேலையையும் முடித்ததாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

எனவே, கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Post

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

Posted by - November 18, 2023 0
சென்னை: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும்,…
Gemini Generated Image bj7m1ebj7m1ebj7m

நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

Posted by - March 28, 2026 0
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கல்கருட தலமாக போற்றப்படும் தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

சரணடையும் நாளிலேயே ஜாமினை பரிசீலிக்க வேண்டும் – திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மனுவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted by - January 25, 2024 0
சரணடையும் நாளில் இருந்து ஜாமின் வழங்க பரிசீலிக்க வேண்டும் என எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன், மருமகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.…

ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Posted by - December 13, 2024 0
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் படிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
cm vijay

TVK Vijay: அதிகாரிகளை கலைத்து போட தயாரான விஜய்..! சென்னை கமிஷ்னர், உளவுத்துறை DIG யார்? அருண்ராஜ் லிஸ்ட்

Posted by - May 6, 2026 0
TVK Vijay: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதுமே தலைமை செயலாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான புதிய அதிகாரிகள் பட்டியலை தயார் செய்யும் பணிகளை விஜய் முடுக்கிவிட்டுள்ளாராம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *